Monday, October 14, 2019

காதல் கோலம்

படிய வாரிய தலையை

காதல் கோலத்தில் களைத்து விட்டாய்

சரிசெய்து கொண்டன விரல்கள்



தினைவு அலைகளை

கடலலைகள் ஏற்க மறுத்தன

தூண்டில் உணவுக்கு

ஏங்கவும் இல்லை இந்த மீன்



கடற்கரை மணல்கள்

அறிவுரைப் பகர்ந்தன

அவைகள் தீர்க்க தரிசிகளானது

இப்போதுதான்



கலங்கரை விளக்கைக் கண்டுதான்

கப்பல் வருவதாக நினைத்தேன்

துறைமுகததை நோக்கி என்பது

பின்னர்தான் தெரிந்தது.



பூக்களோடு இணையும் நார்களே

நல்ல மலரோடு சேருங்கள்

மணம் வீசும் காலத்தில



மணப்பது உங்களைத்தான்…