Monday, October 14, 2019

விடியுமென்று எண்ணி…

மெத்தனமான என் செயல்கள்

எதிரிகளுக்குக் கோட்டை கட்டும்

உரிமையைக் கூட


வழக்காடித்தான்

பெறவேண்டி இருக்கிறது

உல்லாசத்தின் உறைவிடமாய்

காலம் தள்ளி

வழிந்தோடும் ஏரி நீராய்

குமுறல்கள் வெளியேறும்

உறக்கத்தைப் பறித்துக்கொண்ட

எதிர்பார்ப்பு அலைகள்

ஆழிப்பேரலையாய் மூழ்கடிக்கும்

இந்தக் கல்லின் உருவம் காட்டி

சாட்டிகளைக் கூண்டிலேற்றும்

பசுமை நினைவுகள் வறண்டு போக

தாகம் தீர வானம் பார்க்கும்

என்றாவது ஒருநாள்



விடியுமென்றிண்ணி…