உயிரைக் கொல்லும் பிரிவு
வாழ்க்கை வெறுக்கும் சோகம்
எதுவும் செய்யும் காதல்
உலகை மறக்கும் மகிழ்ச்சி
பனிய வைக்கும் தோல்வி
தேவை நாடும் உறவு
வியக்க வைக்கும் வீரம்
அறிவைக் கெடுக்கும் பகை
உலகம் போற்றும் வெற்றி
உலகை வெல்லும் அறிவு
அடிமை ஆக்கும் அன்பு
சுயநலம் போக்கும் நட்பு
சேர்ந்தாரைக் கொல்லும் செல்வம்
துன்பம் நீக்கும் தொழில்
சுமைகள் தாங்கும் துணை
குறைகள் சொல்லும் குழந்தை
இந்தப் போராட்ட உலகில்
இத்தனையும் சேர்த்ததுதான் வாழ்க்கை
புரிந்து நடந்தால் வாழ்க்கை இனிக்கும்.
Monday, November 8, 2021
Tags
# கவிதைகள்

About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
கவிதைகள்
Tags:
கவிதைகள்