அன்னை தந்த ஒருமொழியாம் நாவில் உதித்த முதல்மொழியாம்
அன்னைக் கன்னை கற்பித்த அந்த மொழியே இம்மொழியாம்
அன்னை தொப்புள் கொடிவழியே வந்த மொழியும் இதுவேயாம்
பன்மொ ழிகற்ற அன்னையுமே தன்மொ ழிகற்றுத் தந்திடுவாள்
சின்னப் பிள்ளை காலூன்றி மெல்ல மெல்ல அடிவைத்து
பின்னர் விழுந்து மேலெழுந்து தானே நடக்கக் கற்பதுபோல்
சின்னச் சின்ன வார்த்தைகளை சிறுகச் சிறுகக் கற்றுணர்ந்து
பின்னை நாளில் வளர்ந்தவுடன் விரைவாய்ப் பேசி மகிழ்ந்திடுமே
அன்னை மொழியில் கல்விதனை கற்றால் கல்வி சிறப்பாகும்
தன்மொ ழியோடு பிறமொழியைக் கற்றால் திறமை வெளித்தோன்றும்
தனது மொழியில் பெருமைகொள் ஏனை மொழியைத் தாழ்த்தாதே
தனது மொழிபோல் பிறர்பேசும் எல்லா மொழியும் தாய்மொழியே
தமிழை வளர்க்க பாண்டியர்கள் சங்கம் வைத்து இருந்ததுபோல்
தமிழில் ஆர்வம் உள்ளவரை தமிழ்ப்ப ணிசெய்யும் நல்லவரை
தமிழ கமின்றி பலநாட்டில் இருந்து ஒன்றாய் இணைத்துவைத்து
தமிழை நாளும் வளர்க்கிறது நமது பொங்கு தமிழ்ச்சங்கம்
Sunday, May 29, 2022
Tags
# கவிதைகள்
About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
கவிதைகள்
Tags:
கவிதைகள்