Tuesday, October 17, 2023

மாலை இலக்கியங்கள் நூல் வெளியிட்டு விழா

15.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா உணவக அரங்கில் இரட்டணை நாராயணகவியின் மாலை இலக்கியங்கள் என்னும் நூல் வெளியிடப்பட்டது.  

இந்நூலை நாமக்கல் கவிஞரின் இளய மகன் இராமலிங்கம் ராஜா வெளியிட அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் பாரி முடியரசன், நாமக்கல் கவிஞரின் பெயரன் நாமக்கல் இரா. அ. பழனியப்பன் மற்றும் குடும்பத்தினர், தேசிக விநாயகம் பிள்ளையின் பெயரன் குலசை அ. வேலுப்பிள்ளை,  பண்ணுருட்டி பாவலர் சுந்தரபழனியப்பன், வாணிதாசனின் பெயர்த்தி வளர்மதி முருகன் மற்றும் பலர் உடனிருந்து சிறப்பித்தனர்.