குறள்வெண் செந்துறை
வழங்கிடும் வள்ளல் உண்டு
உறுப்புடன் உடம்பும் ஆவி
கொடுப்பதும் கொடைதான் என்பார்
விருப்புடன் கொடுப்ப தெல்லாம்
பெற்றவர் மகிழத் தானே
தருமமும் கொடையாய் பெற்றார்
தரணியில் கண்ணன் அன்றே
இயற்கையின் சீற்றத் தாலே
இருப்பதை இழந்து விட்டு
தயங்கியே வாழ்வோர்க் கொல்லாம்
கொடுப்பதும் கொடைதா னன்றோ?
வாணிப நோக்க மின்றி
இருப்பதை விரும்பி தந்து
ஏணியாய் உதவும் தன்மை
அறங்களில் சிறந்த தாகும்
ஈதலில் முதன்மை யாக
உணவினை கொடுத்தல் நன்று
பேதமும் இல்லாக் கல்வி
கொடுத்தலும் சிறப்பு என்பேன்.
முனைவர் க. அரிகிருஷ்ணன்
பொருளாளர், அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்
150, கிழக்குத் தெரு, இரட்டணை அஞ்சல்
திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம் - 604 306.