மண்ணில் தானாய் பிறக்காது
சின்ன வித்தை கருவாக்கி
உருவம் தந்து சுமந்திடுவாள்
கன்னி தாயாய் ஆகுமுன்னே
மாற்றம் பலவும் கண்டிடுவாள்
தனது ஆசை பலவற்றைகுழந்தைக் காக தவிர்திடுவாள்
உண்ணும் உணவு எதுவென்று
குழந்தைக் காக உண்டிடுவாள்
பண்ணும் இசையும் தான்மறந்து
குழந்தைப் பிதற்றல் கேட்டிடுவாள்