பெற்ற உயிர்கள் யாவையுமே
நன்றாக செய்யும் தொழில்யாவும்
கற்ற பிறகு செய்தனவே
சின்ன சின்ன எறும்புமுதல்
மனிதர்க் கூட்டம் எனபலவும்
முன்னோர் செய்த முறைபடியே
கண்டு கேட்டு நிகழ்த்தினவே
உண்ணும் உணவு எதுவென்று
ஆய்ந்து முன்னோர் சொன்னபடி
உண்டு பசியை தீர்க்கின்றார்
தாகம் தீர குடிக்கின்றார்
மண்ணில் நச்சு உயிரினங்கள்
கடித்தால் கூட மருந்துவகை
கண்டு நோயை தீர்க்கின்றார்
பாட்டன் பூட்டன் சொன்னபடி
எல்லாம் முன்னோர் வழிகாட்ட
எல்லாம் முன்னோர் வழிகாட்ட
யாரும் செய்ய பழகிவிட்டோம்
எல்லா உயிரும் புணர்ச்சிதனை
எங்கு கற்றுக் கொண்டனவோ?
எல்லா உயிரும் இனவிருத்தி
ஒன்றை எண்ணி கலவிகொள்ளும்
கலவிக் காக மனிதஇனம்
கூடி கொச்சை படுத்தியதே