Sunday, March 23, 2025

வாழ்த்துக் கவிதை

அன்னை என்றால் தாய்மைகுணம்
அன்பு நிறைந்த மணிமகுடம்
உன்னை அண்டி வந்தோர்க்கு
அறிவும் பொருளும் தந்தவளே

வானம் கூட பொய்த்திடலாம்
உனது அன்பு பொய்க்காது
தேனும் பாலும் கலந்தசுவை
பேச்சில் கொண்ட கலையரசி

பண்பாய் பேசும் குலவிளக்கே
பாசம் மிகுந்த பனிமலரே
கணித பாடம் கற்றாலும்
தமிழ்மேல் பற்றுக் கொண்டாயே

பயிராய் உந்தன் முகம்காண
உரமாய் ஆறுதல் சொல்வாயே
உயிராய் இருந்து உறவுகளை
செழிக்க வைக்கும் பொற்குடமே

பொருள்மேல் ஆசை கொள்ளாத
புனித வடிவம் நீயம்மா
சிறப்பாய் உடலும் உள்ளமொடு
அமைந்து வாழ வேண்டுமம்மா

குடும்பம் உறவும் பற்றுகொள்ள
கவலை இல்லா வாழ்வமைய
கொடுக்கும் கடவுள் அருள்வேண்டி
பணிந்து உன்னை வாழ்த்துகிறேன்.