மலைமீது இருப்பவனே
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே
எப்போதும் திருவடியைத்
தொழுதவன் நான்தானே
தப்பாமல் நாள்தோறும்
காத்திட வேண்டுமையா
மாயோனே நெடியோனே
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே
எப்போதும் திருவடியைத்
தொழுதவன் நான்தானே
தப்பாமல் நாள்தோறும்
காத்திட வேண்டுமையா
மாயோனே நெடியோனே
மலைமீது இருப்பவனே
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே
வேறுதுணை இல்லாமலே
நம்பியே வாழுமெனை
வேற்றுவர்போல் சோதித்து
ஏமாற்றம் தருவதேனோ?
கடவுளென்றால் கைகொடுத்து
நம்பினோற்கு துணைஇருக்கும்
விடாமுயற்சி செய்தபோதும்
தோல்விவந்து சேர்வதேனோ?
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே
வேறுதுணை இல்லாமலே
நம்பியே வாழுமெனை
வேற்றுவர்போல் சோதித்து
ஏமாற்றம் தருவதேனோ?
கடவுளென்றால் கைகொடுத்து
நம்பினோற்கு துணைஇருக்கும்
விடாமுயற்சி செய்தபோதும்
தோல்விவந்து சேர்வதேனோ?
மாயோனே நெடியோனே
மலைமீது இருப்பவனே
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே
உறவுகளை விட்டுவிட்டு
உன்னைநம்பி வந்தோமே!
உறவாக உன்னைஎண்ணி
உன்வழியில் நடந்தோமே!
உன்னிடத்தில் சொல்லிசொல்லி
செயல்யாவும் செய்தோமே!
அன்னையாக நீஇருந்து
காப்பதுஉன் கடமையன்றோ?
மாயோனே நெடியோனே
மலைமீது இருப்பவனே
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே
எப்போதும் திருவடியைத்
தொழுதவன் நான்தானே
தப்பாமல் நாள்தோறும்
காத்திட வேண்டுமையா
ஓயாமல் உனைநானே
வணங்கியே மகிழ்ந்தேனே
எப்போதும் திருவடியைத்
தொழுதவன் நான்தானே
தப்பாமல் நாள்தோறும்
காத்திட வேண்டுமையா