பெண்ணென்றால் மென்மையென்று
பேதையர்கள் சொன்னதுண்டு
மண்ணாளும் பெண்ணிங்கே
மண்காத்த கதைகேளீர்
அன்னியர்கள் நம்நாட்டை
ஆளவந்த போதினிலே
தன்னந்த னியாயிருந்து
வென்றெடுத்த கதைகேளீர்
பெண்ணினத்தின் அடையாளம்
வீரத்தின் விளைநிலமே
விண்முட்டும் புகழ்கொண்ட
வீரநங்கை கதைகேளீர்
ஆண்துணை இல்லையென்றால்
அஞ்சுகின்ற பெண்களுண்டு
ஆணாக மாறிபகை
விரட்டியவள் கதைகேளீர்
சிவகங்கைச் சீமையிலே
வாளெடுத்த வீரமங்கை
புவனமெங்கும் புகழ்பரவி
பெருமைகொள்ளும் கதைகேளீர்
இந்நாளில் சுதந்திரமாய்
எல்லோரும் வாழ்வதற்கு
முந்நாளில் வரலாறாய்
ஆனமங்கை கதைகேளீர்.
Wednesday, September 25, 2024
வீர தமிழரசி வேலுநாச்சியார்
Tags
# கவிதைகள்

About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
கவிதைகள்
Tags:
கவிதைகள்