கட்டிக் கொண்ட மண்மகள்
தென்றல் மேனி தீண்டிட
சிலிர்த்து நிற்கும் பூமகள்பூக்கள் சூடிய செடிகளும்
அசைந்து நடனம் செய்யுதே
கொடியில் வீணை மீட்டியே
காற்றும் நுழைந்து செல்லுதே
பருவ நிலவு போல் கவர்ந்து வருகிறாள்
மல்லன் சிலை ஒன்று நடந்து வருகிறாள்
கலையில் குறையாமல் கடந்து வருகிறாள்
காளையார் நெஞ்சம் கவர்ந்து வருகிறாள்
நளினம் கொண்டவள் நகர்ந்து வருகிறாள்