Sunday, November 20, 2022

பாவினச் செய்யுட்கோவை - வேற்றொலி வெண்டுறை

வேற்றொலி வெண்டுறை

ஐந்தடி முதல் ஏழடி வரை வந்து கடைக்கண் இரண்டடியும் பல அடியும் இருசீர் குறைந்து, முன்னர் ஓரோசையும் பின்னர் ஓரோசையும் பெற்று வருவது வேற்றொலி வெண்டுறையாகும். இது ஐந்தடியாய் ஈற்றடி இரண்டும் இரண்டுசீர் குறைந்தும், ஆறடியானும் ஏழடியானும் வந்து முதல் இரண்டி தவிர்ந்து ஏய அடிகள் இரண்டு சீர் குறைந்தும் வரும்.

நெல்வி ளைந்த பூமி எல்லாம் கட்டி டங்கள் ஆச்சி
நல்நீர் தாங்கும் ஏரி எல்லாம் சுண்டி வத்தி போச்சி
சில்லு என்று வீசும் காற்றில் ஈரம் காஞ்சி போச்சி
மெல்ல வானம் மாறி பெய்ய லாச்சி
நல்ம ரங்கள் வெட்டித் தீர்த்த தாலே.
பா. 31

இது நேரொன்றிய ஆசிரியத்தளையால் வந்த வேற்றொலி வெண்டுறை.

மனதிலே இருக்கிற அமைதியும் 
தொலைந்துபோம்
          சுயநலம் எழுவதால்
மனிதரின் சுதந்திரம் கடிதினில் தொலைந்துபோம்
          அகந்தைகள் பிறப்பதால்
மனமிலா மனிதரின் உறவுகள் தொலைந்துபோம்
          பணம்உடன் இருப்பதால்
மனிதமும் தொலைந்துபோம் பொறாமைகள் இருப்பதால்
கனவுகள் தொலைந்துபோம் முயற்சிகள் இலையெனின்
பா. 32

இது நிரையொன்றிய ஆசிரியத்தளையால் வந்த வேற்றொலி வெண்டுறை.

ஆயிரம் jhkiu பூக்களின் சங்கமம் nghynt ஓர்உரு
காயலில் ஆடிய பொற்சிலை nghynt பெண்ணென வந்தது
மையிடும் கண்களோ மானினம் சீவிய பின்னலோ தோரணம்
மையலில் மின்னலாய் புன்னகை பூக்குது
தோயதி nghynt என்மனம் ஆடுது
பா. 33

காயல் - நீர்நிலை, தோயல் - கடல்

இது இயற்சீர் வெண்டளையால் வந்த வேற்றொலி வெண்டுறை.

நாத்துநடும் பெண்களைப்போல் Mirfis நட்டுவைத்தேன் என்மனதில்
பூத்தேடி தேன்செர்க்கும் வண்டுபோல நான்சேர்த்தேன் என்கனவை
பூத்திருந்து ஒத்தையிலே வாசமிடும் பூப்போல
காத்திருந்து வாடுகிறேன் உன்நினைவில் நீயின்றி
பூத்திருக்கும் jhkiuna தேன்சொரியும் பூச்சரமே
காத்தாக என்னைசேர nkfbkd வாராயோ
. பா. 34

இது வெண்சீர் வெண்டளையால் வந்த வேற்றொலி வெண்டுறை.

மதம்பிடித்த களிறுபோல மனிதஇனம் உருவாகும் 
          mjdhny அதுஅழியும்;
விதையில்லா பயிர்வளர்த்து சுவைக்காக உணவுஉண்டு 
          உடல்கெட்டு திரிந்திடுவர்;
சிதைமூட்டும் fdyhf கதிரவனின் அனல்இருக்க 
சதைவெடித்து மருந்துதேடும் சமுதாயம் உருவாகும்;
கதைகளிலே வருவதுபோல் பலமாயாம் நடந்தேறும்;
மதியின்றி மரமழித்து மழையின்றி தினம்தவிப்பார்;
மதியுடையீர் மரம்நடுவீர் பலதுன்பம் தவிர்த்திடுவீர்.
பா.35

இது கலித்தளையால் வந்த வேற்றொலி வெண்டுறை.

மலர்ச்சோலையில் பலமலரினம் மலர்ந்திருப்பதை அழகுஎன்கிறோம்;
          நிறபேதமும் மறந்துகாண்கிறோம்;
பலமலர்களைக் கதம்பமாகவே தொடுத்தணிகிறோம் மறுப்பதில்லையே;
          அழகுசூரியன் தரும்வானவில்
பலவண்ணமே நிறம்வேறென வெறுப்பதில்லையே! இவையாவையும்
          இயற்கைதந்திடும் பகுப்புதானடா;
பலபூக்களில் தொகுத்ததேனில் மலரின்வகை தெரிவதில்லையே!
பலமானிடர் வசிக்குஊரிலே இனம்பார்க்கிறார் மதம்பார்க்கிறார்.
பா.36

இது ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த வேற்றொலி வெண்டுறை.

துள்ளிஓடிடும் ஆற்றுநீரிலே பேதமில்லையே! 
          ஓடிசேர்ந்திடும் ஆழிநீரிலும் பேதமில்லையே!
அள்ளிவீசிடும் மேகதூரலில் வர்ணமில்லையே! 
          வீசிவந்திடும் காற்றுமேனியில் சாதியில்லையே!
பிள்ளைசெல்வமும் பேதைநெஞ்சமும் காண்பதில்லையே! 
          சாதிவேற்றுமை தொற்றுநோய்களும் பார்ப்பதில்லையே!
பிள்ளைசண்டையாய் பூமிஅன்னையை கூறுபோடுறோம் சாகும்வரை
கிள்ளுகீரையாய் சாதிபேரிலே சண்டைபோடுறோம் மாய்ந்துசாகிறோம்.
பா.37

இது ஒன்றாத வஞ்சித்தளையால் வந்த வேற்றொலி வெண்டுறை.