Sunday, November 20, 2022

பாவினச் செய்யுட்கோவை - நிலைவெளிவிருத்தம்

நிலைவெளிவிருத்தம்

மூன்றடியானும் நான்கடியானும் வந்து அடிதோறும் ஐந்தாவது சீராய் தனிச்சொல் பெற்று, ஒவ்வோர் அடியிலும் பொருள் முற்று bgwhJ பொருள் தொடர்புடையதாய் tUtJ நிலை வெளிவிருத்தமாகும்.

கண்கள் சாட்சி சொல்ல வேண்டி - வாழ
கண்ணில் காசுக் கட்டைக் காட்டி - வாழ
உண்மை தூங்க சட்டம் தேடி - வாழ
கண்கள் கட்டி நீதி சொல்வார் - வாழ
பா.38

இது நேரொன்றிய ஆசிரியத்தளையால் வந்த நிலைவெளிவிருத்தம்.

அணிகலன் அணிவதால் உறுப்புகள் சிரித்திடா - மனசுதான்
அணிகலன் இலையெனில் உடல்களும் அழுதிடா - மனசுதான்
அணிவதால் இலையடா அழுவதும் சிரிப்பதும் - மனசுதான்
பா. 39

இது நிரையொன்றிய ஆசிரியத்தளையால் வந்த நிலை வெளிவிருத்தம்.

தேனாய் இனிக்கும் தெகுட்டாக் கனியே - நெருங்கிவா
மேனி குளிர்ந்திடும் தென்றல் Ritna - நெருங்கிவா
ஊனே உயிரே உணர்வே சிலையே - நெருங்கிவா
நானோ இளைத்தேன் உருகித் தவித்தேன் - நெருங்கிவா
பா. 40

இது இயற்சீர் வெண்டளையால் வந்த நிலைவெளிவிருத்தம்.

சாதிமத பேதமேல்லாம்சாத்திரத்தில் உள்ளதென்று - ஏமாற்றி
பேதமுள்ள மக்களையே அங்கங்கே தள்ளிவைத்தான் - ஏமாற்றி
பாதகமாய் நீதிகளைச் சாமிபேரில் சொல்லிவைத்து - ஏமாற்றி
சாதகமாய் வாழ்வமைய செய்சடங்கு ஆக்கிவைத்தான் - ஏமாற்றி.
பா.41

இது வெண்சீர் வெண்டளையால் வந்த நிலைவெளிவிருத்தம்.

பனைமரத்தின் இலைஎடுத்து பலவிதமாய்
          குடிசைபோட்டு - புதுமையினால்
தனைக்காக்கும் பயிர்வளர்த்து உணவுஉண்டு 
          உயிர்வாழ்ந்தார் - புதுமையினால்
அனல்கக்கும் மனையமைத்து மருந்துபோட்டு
          பயிர்ச்செய்து - புதுமையினால்
மனம்கவரும் உணவுதேடி பலநேயால்
          உயிர்விடுவார் - புதுமையினால்.
பா. 42

இது கலித்தளையால் வந்த நிலைவெளிவிருத்தம்.

கரியமேனியை நிறம்மாற்றியே cUthFnj 
          புதுதலைமுறை - புதுஉலகினில்
மரியாதையும் விலைகொடுத்துதான் பெறவேண்டிய
          நிலையானது - புதுஉலகினில்
பொருள்தேடியே உயிர்துறக்கிறார் பொருளின்றியே
          தினம்தவிக்கிறார் - புது உலகினில்
பா. 43

இது ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த நிலை வெளிவிருத்தம்.

வெப்பம்மிகின் நோய்வந்திடும் பூந்தேன்துளி
          நோய்ப்போக்கிடும் - எப்போதுமே
அப்பன்உரை மேல்உயர்த்திடும் கற்றகல்வி
          உ னைக்காத்திடும் - எப்போதுமே
தப்பேதுமே செய்யாமலே ஊர்ப்போற்றிட
          நீவாழ்த்திடு! - எப்போதுமே
பா. 44

இது ஒன்றாத வஞ்சித்தளையால் வந்த நிலை வெளிவிருத்தம்.