நம்மைப் படைத்த தெய்வங்கள்
தன்னை உருக்கி பிள்ளைகளை
காக்கும் இயல்பு கொண்டவர்கள்
அன்னை யாரென் றறியாத
உயிர்கள் கூட இருப்பதுண்டு
அன்னை இன்றி உயிரினங்கள்
தானாய் பிறக்க வழியில்லை
அன்னை தந்தை என்பவர்கள்
நம்மைப் படைத்த தெய்வங்கள்
தன்னை உருக்கி பிள்ளைகளை
காக்கும் இயல்பு கொண்டவர்கள்
கன்னி தாயாய் ஆகுமுன்னே
மாற்றம் பலவும் கண்டிடுவாள்
தனது ஆசை பலவற்றை
குழந்தைக் காக தவிர்திடுவாள்
உண்ணும் உணவு எதுவென்று
குழந்தைக் காக உண்டிடுவாள்
பண்ணும் இசையும் தான்மறந்து
குழந்தைப் பிதற்றல் கேட்டிடுவாள்
அன்னை தந்தை என்பவர்கள்
நம்மைப் படைத்த தெய்வங்கள்
தன்னை உருக்கி பிள்ளைகளை
காக்கும் இயல்பு கொண்டவர்கள்
தந்தை உழைப்பிற் கீடாக
எதையும் சொல்ல முடியாது
தந்தை என்போர் பிள்ளைக்காய்
மலையைக் கூட தாங்கிடுவார்
சிந்தை முழுதும் பிள்ளைகளின்
வளர்ச்சி நோக்கி பயணிப்பார்
தந்தை தோற்றம் முள்பழமே
பழமாய் உள்ளம் இருந்திடுமே
அன்னை தந்தை என்பவர்கள்
நம்மைப் படைத்த தெய்வங்கள்
தன்னை உருக்கி பிள்ளைகளை
காக்கும் இயல்பு கொண்டவர்கள்