சின்னத் தாமரை மலரை போன்றவள்
சிரிக்கும் புன்னகை முகத்தைப் பெற்றவன்
வண்ண கனவினை சுமந்து வந்தவள்
தெளிந்த சிந்தனை குணமாய்க் கொண்டவள்
அவளே பாஞ்சாலி நமது அன்னை பாஞ்சாலி
உறவே பாஞ்சாலி உள்ளம் கவர்ந்த பாஞ்சாலி
குந்தி பாண்டுவின் அன்பு மருமகள்
குற்றம் களைந்திடும் கருணைத் தாயவள்
பிள்ளை போலவே நம்மை காப்பவள்
நோயும் துன்பமும் தீர்த்து வைப்பவள்
குந்தி பாண்டுவின் அன்பு மருமகள்
குற்றம் களைந்திடும் கருணைத் தாயவள்
பிள்ளை போலவே நம்மை காப்பவள்
நோயும் துன்பமும் தீர்த்து வைப்பவள்
அவளே பாஞ்சாலி நமது அன்னை பாஞ்சாலி
உறவே பாஞ்சாலி உள்ளம் கவர்ந்த பாஞ்சாலி
மஞ்ச சேலையில் ஆடி வருகிறாள்
துன்பம் போக்கிட தேடி வருகிறாள்
எந்தன் அன்பினில் கூடி வருகிறாள்
குலத்தைக் காக்கவே ஓடி வருகிறாள்.
அவளே பாஞ்சாலி நமது அன்னை பாஞ்சாலி
உறவே பாஞ்சாலி உள்ளம் கவர்ந்த பாஞ்சாலி
யாக நெருப்பினில் தோன்றி வளர்ந்தவள்
கண்ணன் தங்கையாய் சேர்ந்து வாழ்ந்தவள்
பஞ்ச பாண்டவர் அன்பைப் பெற்றவள்
பஞ்சம் இன்றியே வாழ வைப்பவள்
அவளே பாஞ்சாலி நமது அன்னை பாஞ்சாலி
உறவே பாஞ்சாலி உள்ளம் கவர்ந்த பாஞ்சாலி
சூழ்ந்த உறவினை விட்டுச் சென்றவள்
பெண்ணின் உரிமையை சபையில் கேட்டவள்
வெற்றி கொண்டுதன் கூந்தல் முடிந்தவள்
அவளே பாஞ்சாலி நமது அன்னை பாஞ்சாலி
உறவே பாஞ்சாலி உள்ளம் கவர்ந்த பாஞ்சாலி
அழகு வடிவான அன்னை பாஞ்சாலி!
கொடியும் மலரான அழகு பூஞ்சோலை!
காலைக் கதிரான ஒளிரும் எழில்ஜோதி
கொண்ட வாக்கினை போரில் வென்றவள்