[Verse - Female Voice]
சொட்டுச் சொட்டுச் சொட்டாகபூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!
[Verse - Male Voice]
சொட்டுச் சொட்டுச் சொட்டாக
பூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!
பூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!
[Verse - Male Voice]
திருட்டு விதையை மரம் ஆக்கி
பூமி எங்கும் தழைத்தாயே!
உன்னால் பூமி நிறம் மாறி
பச்சை வண்ணம் பூசியதே!
[Verse - Female Voice]
சொட்டுச் சொட்டுச் சொட்டாகபூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!
[Verse - Male Voice]
உன்னால் பூமி குளிர்கிறது
நீ இல்லாவிட்டால் எரிகிறது
வள்ளல் என்று உன்னைசொல்வார்
மிகுந்தால் அவரே குறைசொல்வார்
மேகம் திரட்டி பொழிகின்றாய்
உயிரின் தாகம் தணிக்கின்றாய்
உணவாய் நீயே இருக்கின்றாய்
உணவுப் பொருளை தருகின்றாய்
[Verse - Female Voice]
சொட்டுச் சொட்டுச் சொட்டாகபூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!
[Verse - Male Voice]
ஏரி குளங்கள் திருவோடாய்
ஏந்தி உன்னை அழைக்கையிலே
ஏமாற்றங்கள் தருகின்றாய்
வாட்டி வதைக்கி ரசிக்கின்றாய்
வேண்டாம் என்று நினைக்கையிலே
வெறுப்பு கொள்ள பெய்கின்றாய்
எங்கிருந்து வந்தாயோ
மீண்டும் அங்கே செல்கின்றாய்
[Verse - Female Voice]
சொட்டுச் சொட்டுச் சொட்டாகபூமி வந்து சேர்ந்தாயே!
பட்டுப் பட்டுப் பூமியினை
மெல்ல மெல்ல நனைத்தாயே!
[Verse - Male Voice]
திருட்டு விதையை மரம் ஆக்கி
பூமி எங்கும் தழைத்தாயே!
உன்னால் பூமி நிறம் மாறி
பச்சை வண்ணம் பூசியதே!