Tuesday, December 9, 2025

பாரதியே! பாரதியே!

பாரதியே! பாரதியே!
எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!

பாரதியே! பாரதியே!
எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!

கொடுமைகளைத் தடுப்பதற்கு 
திரும்ப வருவாயோ! 
கவி எழுதி கவி எழுதி 
ஊக்கம் தருவாயோ!

பாரதியே! பாரதியே!
எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
 
பெண்கொடுமை வன்கொடுமை 
தினமும் நடக்கிறது 
பெண்ணினமும் சுதந்திரத்தை 
தவறாய் நினைக்கிறது
சாதிமதம் இல்லைஎன்றாய்
சலுகை கேட்கிறது.
தமிழ்மொழியை புதைகுழிக்குள் 
மூழ்க பார்க்கிறது

பாரதியே! பாரதியே!
எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!


திறன்பேசி செயலிகளில் 
மூழ்கி கிடக்கிறது. 
கடமைகளை மறந்துவிட்டு
பொழுதைக் கழிக்கிறது
மதுபோதை தினம்குடித்து 
வாழ்வைத் தொலைக்கிறது
மதிமயங்கி வேண்டாத
செயலைச் செய்கிறது

பாரதியே! பாரதியே!
எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!


பெற்றவரின் பேச்சுதனைப் 
பிள்ளை கேட்பதில்லை 
கற்றுதரும் ஆசானை 
எவரும் மதிக்கவில்லை
விவசாயம் அழிகிறது 
கேட்பார் யாருமில்லை
சமுதாயம் சீர்படுத்த 
யாரும் நினைப்பதில்லை


பாரதியே! பாரதியே!
எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!

கொடுமைகளைத் தடுப்பதற்கு 
திரும்ப வருவாயோ! 
கவி எழுதி கவி எழுதி 
ஊக்கம் தருவாயோ!


https://ai.invideo.io/workspace/d66d037b-0922-4eb6-9145-2b5528fc05db/v40-copilot/20428d07-d730-436c-b1b9-5804ec63d200

https://app.pixverse.ai/home


தான்வளர பிறஉயிரைக் 
கொன்று மயக்கிறது 
மரமெல்லாம் வெட்டிவிட்டு 
தினமும் தவிக்கிறது