அன்போடு கேட்டால்
உயிரைத் தந்து கூட
பெற்றுத் தருதல் வேண்டும்
நேசம் கொண்ட குழந்தை
தவறு செய்த போதும்
பிள்ளை மனம் நோகா
நடந்து கொள்ள வேண்டும்
அன்னை தந்தை செயல்கள்
துன்பம் தந்த போதும்
வயது எண்ணி அவர்மேல்
அன்பு காட்ட வேண்டும்.
உலகம் உனது எண்ணம்
போல நடப்பதில்லை
ஆற்று நீரில் பயணம்
செய்து கரையைச் சேரு