காக்க வேண்டும் சாமி
சொந்த பந்தம் யாரும் இல்ல
காக்க வேண்டும் சாமி
பார்க்க வேண்டும் சாமி என்னைப்
பார்க்க வேண்டும் சாமி
கருணை பார்வை கொண்டு என்னைப்
பார்க்க வேண்டும் சாமி
சொந்த பந்தம் எல்லாம்
உறவை பார்ப்பதில்லை
பணத்தை நம்பி தானே
உறவும் தேடி வருது
பணம் இல்லா மனிதன்
பழம் இல்லா மரம்தான்
காய்ந்த குளத்தை நம்பி
எந்த உயிரும் இல்லை.
காசு இல்லாத வாழ்க்கை
காட்டு வழிப் பயணம்
என்ன நடக்கும் என்று
யாரும் சொன்னதில்லை
அன்பு பாசம் எல்லாம்
காய்ந்த ஆறு தானே
நீரைக் கொண்டு நிரப்ப
யாரும் வருதல் இல்லை