மனசு உடையவர்
என்றே சொல்வார்கள்
எத்தனைக் காலம்
மனசு இல்லாத
உயிரே மிருகம்
மனிதா அறிவாயோ?
சுயநலம் கொண்டு
வாழ்வது எல்லாம்
மிருகக் குணம்தானே!
பெருமை குணங்கள்
இருப்பவர் எல்லாம்
இப்படி செய்வாரோ?
பிறருக்கு உதவும்
பிறருக்கு உதவும்
மனமில் லாத
சுயநல மனிதர்கள்!
தான்மட்டும் என்று
நினைத்து வாழும்
அற்ப ஜென்மங்கள்!
காலம் ஒருநாள்
மாறும் அன்று
உண்மை புரிவார்கள்!
சூழல் தனக்கும்
வருமென் யறிந்து
திருந்த பார்ப்பார்கள்!
எத்தனைக் காலம்
உன்செயல் நடக்கும்
தெறிந்து மாறிவிடு!
பிறரின் கையும்
ஓங்கும் ஒருநாள்
அறிந்து வாழ்வுகொடு!
தீமை குணங்கள்
உனக்குள் வேண்டாம்
புத்தி தெளிந்துவிடு
நன்மை நடக்க
துணையாய் இருப்பாய்
மாற்றம் கண்டுவிடு!