யாப்பியல் நோக்கில் புரட்சிக்கவி
முனைவர் க. அரிகிருஷ்ணன்
பொருளாளர்
தமிழ்நாடு, அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்
150, கிழக்குத் தெரு, இரட்டணை அஞ்சல்
திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
முன்னுரை
"புரட்சிக்கவி" என்பது பாரதிதாசன் எழுதிய ஒரு குறுங்காவியமாகும். இந்நூல் பில்கணியம் என்னும் வடமொழி காவியத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. ஒரு சாதாரன கவிஞன் மக்களைத் திரட்டி மாபெரும் புரட்சி ஏற்படுத்தியதை இக் காவியத்தின் வழி அறியலாம். இக்கட்டுரை புரட்சிக் கவியின் அக வடிவத்தை ஆராயாமல் புற வடிவத்தை ஆராய்கிறது. அவ்வகையில் இக்காவியத்தில் பயின்று வரும் பா வகைகளைப் பற்றி இனிக் காண்போம்.
பயின்று வரும் யாப்பு வடிவங்கள்
புரட்சிக் கவியில், பஃறொடை வெண்பா (1) ஆசிரியப்பா(1), எண்சீர் விருத்தம்(27), சிந்து கண்ணி(13), நொண்டிச்சிந்து(6), , கும்மி(2) ஆகிய வடிவங்களில் மொத்தம் ஐம்பது பாடல்களைச் சமைத்துள்ளார் பாரதிதாசன்.
பஃறொடை வெண்பா
புரட்சிக் கவியில் 102 அடிகளைக் கொண்டு, ஈற்றடி முச்சீராகவும் ஈற்றுசீர் காசு என்ற வாய்பாட்டிலும் ஒரு பாடலை அமைந்துள்ளார் இதன் ஆசிரியர். பதிப்பாசிரியர்கள் இப்பாடலை பஃறொடை வெண்பா என்றே குறிப்பிட்டுப் பதிப்புத்துள்ளனர்.
தொல்காப்பியர் பஃறொடை வெண்பாவை நெடுவெண்பாட்டு எனக் குறிப்பிட்டு நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே (தொல். செய். 158) என இலக்கணம் வகுத்துக் கூறுகிறார். அவ்வாறாயின் பஃறொடை வெண்பாவின் எல்லை பன்னிரண்டடி ஆகும். உரையாசிரியர்களும், பஃறொடை வெண்பாவின் இலக்கணத்தைக் கூறுமிடத்து ஐந்தடி முதலாக பன்னிரண்டடி ஈறாக தனிச்சொல் இன்றி ஒருவிகற்பமோ பல விகற்பங்களோ பெற்று வரும் என்கின்றனர். அவ்வாறாயின்,
“வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்
மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க
ஆனந்தத் தென்றல்வந்தாரத் தழுவுவதும்
நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?
சித்தரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக்
கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,
மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க
ஆனந்தத் தென்றல்வந்தாரத் தழுவுவதும்
நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?
சித்தரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக்
கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,
..................... .................. .................... ......................
எனவரும் இப்பாடல் பஃறொடை வெண்பாவாகக் கொள்ளுதற்கில்லை. எனினும், பஃறொடை வெண்பாவிற்கு இலக்கணம் கூறும் பிற்கால யாப்பியல் நூல்கள் என்னக் கூறுகின்றன என்று பார்த்தோமேயானால்,
தொடைஅடி இத்துணை என்னும் வழக்கம்
உடையது அன்றி உறுப்பு அழிவிலா
நடையது பஃறொடை நாமம் கொளலே - கா.பா. நூ. 52
எனக் காக்கைபாடினியமும்
தொடைபல தொடுப்பன பஃறொடை வெண்பா - சிறு. கா.பா
எனச் சிறுகாக்கைப் பாடினியமும்
தொடைமிகத் தொடுப்பது பஃறொடை வெண்பா - அவி. நூ. 77
என அவநயமும்
பாதம் பலவறின் பஃறொடை வெண்பா - யாப்பருங்கலம் நூ. 62
என யாப்பருங்கலமும்
நாலடி மிக்கடிநண்ணில் பஃறொடை - தொன்னூல் விளக்கம் நூ. 222
என தொன்னூல் விளக்கமும் இலக்கணம் பகர்கின்றன. இவற்றில் ஒன்று கூட பஃறொடை வெண்பாவின் அடி எல்லையைச் சுட்டிக் கூறவில்லை. இவற்றிலிருந்து பஃறொடை வெண்பா எத்தனை அடிகளை வேண்டுமானாலும் பெற்று வராலாம் எனத் தெரிகிறது. பிற்காலத்தில் பஃறொடை வெண்பாவை தனிச்சொல் பெற்றுவரும் பஃறொடை வெண்பா, தனிச்சொல் இன்றிவரும் பஃறொடை வெண்பா என இரண்டாகப் பிரிப்பர். இவ்வகையில் இப்பாடல் தனிச்சொல் இன்றி வந்த பஃறொடை வெண்பாவாகவே கொள்ளலாம்
நேரிசை ஆசிரியப்பா
ஈற்றயலடி சீர் குறைந்து ஏனைய அடிகள் நாற்சீர் கொண்டதாக அமையும் நேரிசை ஆசிரியப்பாவில் ஒரு பாடலை அமைத்துள்ளார் கவிஞர்.
‘அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்!
தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள்
அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்;
ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்;
அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள்
கவிதை புனையக் கற்றாள் இல்லை.
மலரும், பாடும் வண்டும், தளிரும்,
மலையும், கடலும், வாவியும், ஓடையும்.
விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும்,
மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும்,
தமிழின் அமுதத் தன்மையும் கவர்வன, அதனால்
காலையம் பரிதியும் மாலை மதியமும்
கண்ணையும் மனதையும் கவர்வன ஆதலால்
என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத்த துதற்குச்
செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்!
ஏற்றதோர் ஆசான் எங்குளான்?
தோற்றிய வாறு சொல்க அமைச்சரே!’- புரட்சிக்கவி ப. 01
எண்சீர் ஆசிரிய விருத்தம்
மின்னற் குலத்தில் விளைந்ததோ?-வான்
வில்லின் குலத்திற் பிறந்ததோ?
கன்னற் தமிழ்க்கவி வாணரின்-உளக்
கற்பனையே உருப்பெற்றதோ?
பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ?-ஒரு
பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?
என்று நினைத்த உதாரன்தான்-’நீ
யார்?’ என்ற ஓர் உரை போக்கினான்.
நான்மை நடையுடன், நாலாஞ் சீரில்
தனிச்சொல் தழுவி இனித்திட நடப்பது.
நொண்டிச் சிந்தென நுவலப் படுமே.
நாலசைத் தனிச்சொல் நடுவே மடுத்தலும்,
ஐந்தாஞ் சீரிலும் ஏழாம் சீரிலும்
எதுகை பெறுதலும் எழில்மிகத் தருமே. - சிந்துப் பாவியல் - 35. 36
'குவிந்த உன் உடற்ச தையைப்-பல
கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன்.
தவந்தனில் ஈன்ற என்பெண்-மனம்
தாங்குவ தில்லையெனிற் கவலை இல்லை!
நவிலுமுன் பெரும்பி ழைக்கே-தக்க
ராசதண்டனை யுண்டு மாற்ற முண்டோ?
என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத்த துதற்குச்
செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்!
ஏற்றதோர் ஆசான் எங்குளான்?
தோற்றிய வாறு சொல்க அமைச்சரே!’- புரட்சிக்கவி ப. 01
இப்பாடல் பத்தொன்பது அடிகளைப் பெற்று ஈற்றயலடி குறைந்து வந்துள்ளதைக் காணலாம்.
எண்சீர் ஆசிரிய விருத்தம்
நான்காய் அளவொத்து வரும் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் 27 பாடல்கள் காணக்கிடைக்கின்றன.
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான்
சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிர்அடைந்த ஒளிப்பி ழம்போ - புரட்சிக்கவி ப. 20
நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான்
சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிர்அடைந்த ஒளிப்பி ழம்போ - புரட்சிக்கவி ப. 20
கவிஞன் குருடன் அல்ல என்பதை கதை நாயகிக்கு உணர்த்து இப்பாடல், ஓரடியில் எட்டு சீர்களைப் பெற்று காய் காய் மா தேமா என்ற வாய்பாட்டில் வந்துள்ளது. இப்பாடல் அமைப்பிலேயே அனைத்துப் பாடல்களும் அமைந்துள்ளன.
சிந்துக் கண்ணி
முதலடியிலேயே தனிச்சொல் பெற்று வரும் பாடல்களைச் சிந்து எனப்படுகிறது. இரண்டடிகள் அளவொத்து ஓர் எதுகைப் பெற்றுவரும் பாடலைக் கண்ணி என்பர். சிந்துக் கண்ணி என்பது ஓர் எதுகை பெற்று இரண்டடியாய் அளவொத்து முதலடியில் தனிச்சொல் பெற்று வருவதாகும், இவ்வாறு, ஓரடியில் இரண்டு சீரிகள் அமைந்து முதலடியில் தனிச்சொல் பெற்று வருவனவாக நான்கு பாடல்களும் ஓரடியில் மூன்று சீரிகள் அமைந்து முதலடியில் தனிச்சொல் பெற்று வருவனவாக ஐந்து பாடல்களும் என மொத்தம் ஒன்பது பாடல்கள் சிந்துக் கண்ணி அமைப்பில் உள்ளன.
யாப்புமுறை உரைப்பான்-அணி
யாவும் உரைத்திடுவான்;
பாப் புனை தற்கான-அநு
பவம்பல புகல்வான்.
தீர்ப்புற அன்னவளும்-ஆக
சித்திரம் நன்மதுரம்,
சேர்ப்புறு வித்தாரம்-எனும்
தீங்கவிதை அனைத்தும்,
பாப் புனை தற்கான-அநு
பவம்பல புகல்வான்.
தீர்ப்புற அன்னவளும்-ஆக
சித்திரம் நன்மதுரம்,
சேர்ப்புறு வித்தாரம்-எனும்
தீங்கவிதை அனைத்தும்,
இப்பாடல் ஓரடியில் இரண்டு சீர்கள் கொண்டு தனிச்சொல் பெற்று வந்த சிந்துக் கண்ணி ஆகும். இவ்வமைப்பில் நான்கு பாடல்கள் கிடைக்கின்றன.
வில்லின் குலத்திற் பிறந்ததோ?
கன்னற் தமிழ்க்கவி வாணரின்-உளக்
கற்பனையே உருப்பெற்றதோ?
பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ?-ஒரு
பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?
என்று நினைத்த உதாரன்தான்-’நீ
யார்?’ என்ற ஓர் உரை போக்கினான்.
இப்பாடல் ஓரடியில் மூன்று சீர்கள் கொண்டு தனிச்சொல் பெற்று வந்த சிந்துக் கண்ணி ஆகும். இவ்வமைப்பில் ஐந்து பாடல்கள் காணக்கிடைக்கின்றன.
‘கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி
கற்க உன்பால் விடுத்தேன்-அட!
குற்றம் புரிந்தனையா இல்லையா இதை
மட்டும் உரைத்துவிடு!!
வெற்றி எட்டுத்திக்கு முற்றிலுமே சென்று
மேவிட ஆள்பவன் நான்-அட
இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை
என்னென்றுதா னினைத்தாய்?
கற்க உன்பால் விடுத்தேன்-அட!
குற்றம் புரிந்தனையா இல்லையா இதை
மட்டும் உரைத்துவிடு!!
வெற்றி எட்டுத்திக்கு முற்றிலுமே சென்று
மேவிட ஆள்பவன் நான்-அட
இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை
என்னென்றுதா னினைத்தாய்?
இவ்வமைப்பிலானப் பாடல்கள் நான்கு கிடைக்கின்றன. இவை முதலடியின் ஈற்றிலும் மூன்றாம் அடியின் ஈற்றிலும் தனிச்சொல் பெற்று வருகின்றன. ஓரடியில் ஏழு சீர்களைப் பொறறு வரும் இப்பாடலையும் சிந்துக் கண்ணி என்றே கூறுலாம்
நொண்டிச் சிந்து
நொண்டிச் சிந்து என்பதும் சிந்து வகைகளுள் ஒன்றாகும். நொண்டிச் சிந்துகளில் நாலாம் சீராக நடுவே வரும் தனிச்சொல் நான்கு உயிர்ளைப் பெற்றுவருவதும், ஒவ்வோரடியின் ஐந்தாம் சீரிலும், ஏழாம் சீரிலும் எதுகை பெற்றுவருவதும் அப்பாடலுக்கு மிகுந்த அழகை அளிக்கும். இன்றைய நொண்டிச் சிந்துக்களில் தனிச்சொற்கள் பெரும்பாலும் ஈரசைச் சொற்களாக உள்ளன. ஓரசைச் சொற்கள் அருகி வருகின்றன.
எண்சீர் அடிகள் இரண்டோர் எதுகையாய்,
ஐந்தாம் சீர்தொறும் மோனை அமைந்து,நான்மை நடையுடன், நாலாஞ் சீரில்
தனிச்சொல் தழுவி இனித்திட நடப்பது.
நொண்டிச் சிந்தென நுவலப் படுமே.
நாலசைத் தனிச்சொல் நடுவே மடுத்தலும்,
ஐந்தாஞ் சீரிலும் ஏழாம் சீரிலும்
எதுகை பெறுதலும் எழில்மிகத் தருமே. - சிந்துப் பாவியல் - 35. 36
கவிஞன் இவ்வாறு ரைத்தான்-புவி
காப்பவன் இடியெனக் கனன்று ரைப்பான்;'குவிந்த உன் உடற்ச தையைப்-பல
கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன்.
தவந்தனில் ஈன்ற என்பெண்-மனம்
தாங்குவ தில்லையெனிற் கவலை இல்லை!
நவிலுமுன் பெரும்பி ழைக்கே-தக்க
ராசதண்டனை யுண்டு மாற்ற முண்டோ?
எனவரும் பாடல் முதலாக நொண்டி சிந்து அமைப்பில் ஆறு பாடல்களை அமைத்துள்ளார் பாரதிதாசன்.
கும்மி
பெண்கள் குழுவாகக் குழுமி ஆடும் ஆட்டம் கும்மி எனப்படுகிறது. இக்கும்மியை யாப்பதிகாரம் முதலியன தனி வகையாகக் கூற, சிந்துப்பாவியல் சிந்தின் ஒருவகையாகவே கூறுகிறது. (ய. மணிகண்டன், தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, ப,222 விழிகள் பதிப்பகம்) இதனைஇரண்டடி அளவொத்து வரும் செந்துறையாகக் கொண்வார் முனைவர் க. அரிகிருஷ்ணன் (முனைவர் க. அரிகிருஷ்ணன், யாப்பியல் நூல்களில் பாவின வளர்ச்சி ப. 16, தமிழ்க்கடல் பதிப்பகம் 2025)
‘நாயை இழுத்துப் புறம் விடுப்பீர்-கெட்ட
நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே!-இந்தப்
பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்-என்
தூய குடிக்கொரு தோஷத்தையே தந்த
துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை-தன்னில்
போய் அடைப்பீர்! அந்தப் பொய்யனை ஊரெதிர்
போட்டுக் கொலை செய்யக் கூட்டிச் செல்வீர்!
நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே!-இந்தப்
பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்-என்
தூய குடிக்கொரு தோஷத்தையே தந்த
துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை-தன்னில்
போய் அடைப்பீர்! அந்தப் பொய்யனை ஊரெதிர்
போட்டுக் கொலை செய்யக் கூட்டிச் செல்வீர்!
இப்பாடல் அமைப்பில் இரண்டு பாடல்களை படைத்துள்ளார் ஆசிரியர்.
தொகுப்புரை
பாரதிதாசன் தாம் இயற்றிய புரட்சிக் கவியில் பா, பாவினம், பிற்கால யாப்பு வடிவங்கள் என அனைத்தையும் கையாண்டுள்ளார். அவ்வகையில், பத்தொன்பது அடிகளைப் பெற்றுவரும் நேரிசை ஆசிரியப்பா, 102 அடிகளைக் கொண்ட பஃறொடை வெண்பா, 27 கழிநெடிலடி எண்சீர் ஆசிரியவிருத்தம், 13 சிந்துக் கண்ணிகள், ஆறு நொண்டிசிந்து, இரண்டு கும்மி என ஐம்பது பாடல்களில் காவியத்தை அமைத்துள்ளார் எனலாம்.