Tuesday, June 16, 2026

கண்ணதாசன் பட்டிமன்றம் 16.06.2026

June 16, 2026
கண்ணதாசன் பட்டிமன்றம் 16.06.2026

கண்ணதாசன் ஒரு கவிதைச் சுரங்கம். மண்ணைத் தோண்டத் தோண்ட கிடைக்கும் பொன், வெள்ளி, வைரம், வைடூரியம் முதலான மணிகள் போன்று அவரின் பாடல்களில் அன்பு, பாசம், காதல், குடும்பம், இயற்கை என அரியச் செய்திகளை எல்லாம் குவித்து வைத்திருப்பார். இப்பாடல்கள், மனதுக்குத் இதமாகவும் புண்பட்ட நெஞ்சுக்கு மருந்தாகவும் அமைகின்றன.

தத்துவம் என்பது

வாழ்வியல் உண்மைகளே தத்துவமாகின்றன. அவ்வாழ்வியல் உண்மைகளை அவர் இயற்றிய அனைத்துவகைப் பாடல்களிலும் காணமுடியும். 

பிறந்ததில் இருந்து எல்லா மனிதனும்  ஏதேனும் ஒரு வாழ்வியல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கிறான். அத்தகையத் தாக்கம் அவனது ஆழ் மனதில் எங்கே ஒரு மூளையில் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

கண்ணதாசனின் தத்துவப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவனுக்குள் ஒளிந்து கொண்டிருந்த தாக்கங்கள் வெளிப்பட்டு ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் கேட்டு மகிழ்கிறான்.


கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே


பணமிருக்கும் மனிதரிடம்
மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம்
பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலெ
வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு
சொந்தமெல்லம் துன்பம்


நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

அண்ணன் தங்கை உறவையும் கூறல்

சிறகில் எனை மூடி 
அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத 
காலம் இடை வந்து 
பிரித்த கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா....
கண்ணில் மணி போல 
மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த 
மண்ணும் கடல் வானும் 
மறைந்து முடிந்தாலும் 
மறக்க முடியாதடா - உறவைப்
பிரிக்க முடியாதடா

மலர்ந்தும் மலராத 
பாதி மலர் போல 
வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத 
காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே

கணவன் மனைவி உறவு கூறல்

ஆலம் விழுதுகள் போல் - உறவு 
ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

உறவுளைக் கூறல்

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?

குடும்பம் பற்றி கூறல்

பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் – நல்ல
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் – புதுப்
பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில் (மணமகளே)

தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது – இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது (மணமகளே)

மணமகளே மருமகளே வா வா – உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா (மணமகளே)

வாழ்வியல் ஏற்றத் தாழ்விகளைக் கூறல்

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

பாதுகாப்பும் மதிப்பும் கூறல்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது 
உலகம் உன்னை மதிக்கும் - உன் 
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் 
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று 
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் 
எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது.. 
அதில் அர்த்தம் உள்ளது..

கையறு நிலை பற்றி கூறல்

குளத்தில தண்ணி இல்லே, 
கொக்குமில்ல மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே, 
பெத்த புள்ளே சொந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

வாழ்வின் இறுதி நிலை கூறல்

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

காதலில் தத்துவம்

பட்டணத்துக்-காதலப்பா-பாதியிலே-மறையுமப்பா
பட்டிக்காட்டு-காதலுக்கு-கெட்டியான-உருவமப்பா

பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்
பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்
ஊரப்பா-பெரியதப்பா-உள்ளம்-தான்-சிறியதப்பா

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

விருது சான்றிதழ் தயாரிப்பு

June 16, 2026


இப்படத்தை வைத்து கோவில் திருவிழாக்கள், பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் நகைச்சுவை பட்டிமன்றம், இன்னிசை பாட்டுமன்றம், வரலாற்று மேடை நாடகங்கள், தன்னம்பிக்கை பேச்சுக்கள் முதலியன நடத்திட அழைக்கவும்

தொடர்புக்கு:
பாவலர் சுந்தரபழனியப்பன்
தலைவர், பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம்
தலைவர் தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்
பண்ணுருட்டி, கடலூர் மாவட்டம்
87783 68793, 98423 45719 பேனர் தயாரித்துக் கொடுக்கவும்

இதில் உள்ள "அழைக்கும் தங்கள் அழகு படுத்துவோம்" என்பதை நீக்கிவிட்டு அந்த இடத்தில்

"நடத்திட அழைக்கவும்" என்பதை சேர்த்து விடவும்

இதில் உள்ள "நடத்திட அழைக்கவும்" என்பதை மட்டும் எழுத்து அளவு சிறியதாக மாற்றி தரவும்


இந்த லோகோவை சிறிய அளவில் வைத்து, "தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்" 


நடத்தும் கவியரசர் கண்ணதாசன் பன்னாட்டு கவியரங்கம் என்பதை தலைப்பாக வைத்து

தமிழ்த்திரு. (பெயருக்கு போதிய இடம் விட்டு)

என்பவர் இக் கவியரங்கில் "காலத்தை வென்ற கவிஞன்" என்னும் தலைப்பில் கவிதை வாசித்தமையைப் பாராட்டி இவருக்கு "கவியரசர் பற்றாளர்" என்னும் விருது வழங்கப்படுகிறது. என்பதை சான்றிதழ் பகுதியில் வைத்து

கௌரவத் தலைவர் தலைவர்
முதல் வரிசையிலும்

பொதுச் செயலாளர் செயலாளர் பொருளாளர் இரண்டாம் வரிசையிலும் அமைத்து கையொப்பம் இடுவதற்கு போதிய இடம் விட்டு ஒரு விருது சான்றிதழ் தயாரித்து கொடுக்கவும்

----------------------------------------------------------------------------------------------------------------

இந்த லோகோவை சிறிய அளவில் வைத்து, "தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்" 
பதிவு பெற்ற தன்னாட்சி அமைப்பு
அரசு பதிவு எண்: 26/2022
("ஜெருசலேம் பல்கலைக்கழகம்" மற்றும் "டெல்லி கலை இலக்கிய பேரவை" வழங்கிய சிறந்த தமிழ்ப் பணிக்கான விருது பெற்ற சங்கம்) என்பதை சான்றிதழின் மேலே வைத்து,

நற்சான்றிதழ்

தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் நடத்திய இறைநெறிச்செல்வர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் கவியரங்க தொகுப்பு நூலில் தன்னுடைய கவிதை வழங்கியமையைச் சிறப்பித்து தமிழ்த்திரு. (பெயருக்கு போதிய இடம் விட்டு) என்பவருக்கு "இறைநெறிச் செல்வர் சாந்தலிங்க மருதாசல அடிகள் விருது" வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. என்பதை சான்றிதழ் பகுதியில் வைத்து
 

கௌரவத் தலைவர் தலைவர்
முதல் வரிசையிலும்

பொதுச் செயலாளர் செயலாளர் பொருளாளர் நிர்வாக செயலாளர் இரண்டாம் வரிசையிலும் அமைத்து  ஒரு விருது சான்றிதழ் தயாரித்து கொடுக்கவும்



இச்சான்றிதழில் கௌரவத் தலைவர் தலைவர் பொதுச்செயலாளர் செயலாளர் பொருளாளர் நிர்வாக செயலாளர் ஆகியோர் அதே வரிசையில் இருக்க வேண்டும் அவருக்கு மேலே உள்ள கோட்டை மட்டும் நீக்கி விட்டு தரவும்

Tuesday, May 26, 2026

திரௌபதி அம்மன் பிள்ளைத்தமிழ் - காப்புப் பருவம் Images

May 26, 2026















Monday, May 11, 2026

படம் தயாரிப்பு

May 11, 2026
படம் தயாரிப்பு

 இப்படத்தை வைத்து சிற்றிலக்கிய சிற்பி இரட்டணை நாராயணகவியின் படைப்புலகம் என்பதை தலைப்பாக வைத்து கீழே கவிதை எழுதுவதற்கான இடத்தை விட்டு அளவில் 9:16 ஒரு படம் தயாரித்து கொடுக்கவும்

என்ற வினா விடைகளை THAMIZHKADAL வெளியிடுவது போல் 9:16 அளவில் படம் தயாரித்துக் கொடுக்கும்

இந்த கவிதையை தமிழில் வாசிப்பது போல 9:16 அளவில் வீடியோ தயாரித்துக் கொடுக்கவும்

கவிதையை audio-வாக (text-to-speech) உருவாக்க உதவலாம் — நீங்கள் CapCut, InVideo, Runway, Pika Labs போன்ற இலவச/கட்டண AI டூல்களில் பயன்படுத்தலாம்.


Saturday, May 9, 2026

கவிதைத் துணுக்குகள்

May 09, 2026


தலைப்பு : 

அன்னை 

பெண்ணின் குணங்கள் 
மெல்ல வளர்த்து 

பெண்மை குணங்கள் 
முழுமை அடைந்து 

தன்னுள் உயிரை 
மெள்ள சுமந்து 

மண்ணில் விதைத்து 
வளர்த்து மகிழ்வாள் 

முயற்சி

கல்லும் முள்ளும் 
காலில் குத்த 

வயிறும் வறுமை 
என்னை தாக்க 

பொறுமை யோடு 
மெல்ல மெல்ல 

வெற்றி மாலை 
சூடிக் கொண்டேன்



- கவிஞர் இரட்டணை நாராயணகவி

கல்லும் முள்ளும் 
காலில் குத்த 

வயிறும் வறுமை 
என்னை தாக்க 

பொறுமை யோடு 
மெல்ல மெல்ல 

வெற்றி மாலை 
சூடிக் கொண்டேன் 

என்ற கவிதையை தமிழில் வாசிப்பது போல 9:16 அளவில் வீடியோ தயாரித்துக் கொடுக்கவும்

Friday, May 8, 2026

மனிதர் என்றால் மனசு உடையவர் என்றே சொல்வார்கள்

May 08, 2026
மனிதர் என்றால் மனசு உடையவர் என்றே சொல்வார்கள்
மனிதர் என்றால்
மனசு உடையவர் 
என்றே சொல்வார்கள் 
மனசு இல்லாத 
உயிரே மிருகம் 
மனிதா அறிவாயோ? 

சுயநலம் கொண்டு 
வாழ்வது எல்லாம் 
மிருகக் குணம்தானே! 
பெருமை குணங்கள் 
இருப்பவர் எல்லாம் 
இப்படி செய்வாரோ?

பிறருக்கு உதவும் 
மனமில் லாத 
சுயநல மனிதர்கள்! 
தான்மட்டும் என்று 
நினைத்து வாழும் 
அற்ப ஜென்மங்கள்! 

காலம் ஒருநாள் 
மாறும் அன்று 
உண்மை புரிவார்கள்! 
சூழல் தனக்கும் 
வருமென் யறிந்து 
திருந்த பார்ப்பார்கள்!

எத்தனைக் காலம் 
உன்செயல் நடக்கும்
தெறிந்து மாறிவிடு! 
பிறரின் கையும் 
ஓங்கும் ஒருநாள் 
அறிந்து வாழ்வுகொடு! 

தீமை குணங்கள் 
உனக்குள் வேண்டாம் 
புத்தி தெளிந்துவிடு
நன்மை நடக்க 
துணையாய் இருப்பாய் 
மாற்றம் கண்டுவிடு!

Thursday, May 7, 2026

பாடல் - 59 : எது செய்தாலும் குற்றம் சொல்லுது ஊரு

May 07, 2026
பாடல் - 59 : எது செய்தாலும் குற்றம் சொல்லுது ஊரு
எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 
எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 
மனிதன் என்று 
அதற்குத்தானே பேரு 
மனதைத் தொட்டு 
உண்மை சொல்ல கேளு 
மனித வடிவில் 
நஞ்சு கொண்ட விலங்கு 
சொல்லில் செயலில் 
பிறரை தாக்கும் குரங்கு

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 

நமது செயல்களை 
குறை சொன்னால் வரும் கோபம் 
பிறர் மேல் சொல்ல 
அவர்க்கும் உண்டு வீரம் 
நமது வேலை 
நமது செயலென இருப்பாய் 
எல்லை தாண்டி 
ஏசல் பேசல் தவிர்ப்பாய் 
நாக்கு வளையும் 
என்பதற்காக வெளியே! 
விட்டால் துண்டாய் 
விழுந்து போகும் தனியே!

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 

உரிமை என்பது 
எல்லைக்குள்ளே இருக்கு 
மீறி விட்டால் 
உனக்கும் சட்டம் பொறுப்பு 
வாய்க்கு வந்ததை 
பேசிட வேண்டாம் தம்பி 
வரம்பு மீறினால் 
தண்டனை உண்டு தம்பி 
பிறரை குறைகள் 
சொல்ல உரிமை இல்லை 
திறமை காட்டு 
வானம் உனது எல்லை

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 
மனிதன் என்று 
அதற்குத்தானே பேரு 
மனதைத் தொட்டு 
உண்மை சொல்ல கேளு 
மனித வடிவில் 
நஞ்சு கொண்ட விலங்கு 
சொல்லில் செயலில் 
பிறரை தாக்கும் குரங்கு

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 

நமது செயல்களை 
குறை சொன்னால் வரும் கோபம் 
பிறர் மேல் சொல்ல 
அவர்க்கும் உண்டு வீரம் 
நமது வேலை 
நமது செயலென இருப்பாய் 
எல்லை தாண்டி 
ஏசல் பேசல் தவிர்ப்பாய் 
நாக்கு வளையும் 
என்பதற்காக வெளியே! 
விட்டால் துண்டாய் 
விழுந்து போகும் தனியே!

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 

Monday, May 4, 2026

பாடல் - 58 : நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள்

May 04, 2026
பாடல் - 58 : நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள்
நாட்டை ஆளும்
அரசியல் தலைவர்கள் 
கவனம் கொள்ளுங்கள் 
ஆட்சி சிறப்பாய் 
இல்லை என்றால் 
தூக்கி எறிவீர்கள் 
சுயநல திட்டம் 
என்றும் வேண்டாம் 
மக்களைப் பாருங்கள் 
பொருளைச் சேர்த்திட 
அரசியல் இல்லை 
சேவைகள் செய்யுங்கள்

நாட்டை ஆளும்
அரசியல் தலைவர்கள் 
கவனம் கொள்ளுங்கள் 
ஆட்சி சிறப்பாய் 
இல்லை என்றால் 
தூக்கி எறிவீர்கள் 

ஆட்சி கையில் 
வந்தது என்று 
ஆட்டம் போடுகிறீர் 
மக்களை மறந்து 
உங்களின் குடும்பம்
தழைக்கச் செய்கின்றீர் 
வந்திடும் திட்டம் 
மக்களை மறந்து 
கமிஷன் தேடுகிறீர் 
மக்களின் வறுமை 
போக்கிடும் திட்டம் 
செயல்பட மறுக்கின்றீர்

நாட்டை ஆளும்
அரசியல் தலைவர்கள் 
கவனம் கொள்ளுங்கள் 
ஆட்சி சிறப்பாய் 
இல்லை என்றால் 
தூக்கி எறிவீர்கள் 

கல்வி கற்றோர் 
வாழ்வு சிறக்க 
திட்டம் தீட்டுங்கள் 
உழவுத் தொழிலைச் 
செய்வோர் கண்டு 
ஊக்கம் காட்டுங்கள் 
இலவசம் வேண்டாம்
வறுமைகள் நீங்க 
வழிவகை செய்யுங்கள் 
பாலியல் போதை 
இல்லாத நாடாய் 
மாற்றிட பாருங்கள்

நாட்டை ஆளும்
அரசியல் தலைவர்கள் 
கவனம் கொள்ளுங்கள் 
ஆட்சி சிறப்பாய் 
இல்லை என்றால் 
தூக்கி எறிவீர்கள் 

Sunday, April 26, 2026

பாடல் - 57 : கண்ணிலே மையை வைத்து

April 26, 2026


கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!
கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!
யாரு ஆள வேண்டும்
சொல்லும் உந்தன் விரல்மை
தெளிந்த சிந்தை வேண்டும்
அதுவே உந்தன் திறமை

கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!

பணத்தைப் பார்க்க வேண்டாம்
இனத்தைப் பார்க்க வேண்டாம்
சொந்தம் பந்தம் என்று
எதுவும் பார்க்க வேண்டாம்
மற்ற வர்கள் சொல்லை
நீயும் கேட்க வேண்டாம்
உனக்குள் உண்மை தேடு!
கண்டு ஓட்டு போடு!
ஊரும் சிறக்க வேண்டும்
நாடும் வளர வேண்டும்

கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!

உண்மை யான தேசம்
வறுமை இல்லா தேசம்
கலவை கொண்ட தேசம்
கருணை உள்ள தேசம்
சிந்தை ஒன்று கொண்ட
மக்கள் வாழும் தேசம்
மக்கள் மீது அன்பு 
கொண்ட தலைவன் வேண்டும்
சுயநலங்கள் இல்லா
நல்ல தலைவன் வேண்டும்

கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!
யாரு ஆள வேண்டும்
சொல்லும் உந்தன் விரல்மை
தெளிந்த சிந்தை வேண்டும்
அதுவே உந்தன் திறமை

கண்ணில் மையை வைத்து
அழகுக் காட்டும் பெண்ணே!
கையில் மையை வைத்து
புரட்சி செய்வாய் கண்ணே!























உண்மை சொல்லும் பாரு
குணத்தைப் பார்த்து போடு








பிறப்பு காண வேண்டாம்














நல்ல மனிதர் கண்டு
நீயும் ஓட்டு போடு












மையைப் பூசும் பெண்ணே
அழகு காட்டும் கண்ணே
மையால் மாற்றம் வருமே
சொல்லப் பேறேன் கேறு


மாற்றம் ஒன்று தானே
புத்தம் புதுமை செய்யும்
விரலில் மையை வைத்து
புதுமை காண வேணும்

மையே அழகு - கரு
மையே அழகு
கண்கள் பூசும் மையாலே
பெண்ணே அழகு


மாற்றம் அழகு புது
மாற்றம் அழகு
விரலில் பூசும் மையாலே
மாற்றம் அழகு


ஓட்டு போடும் பெண்ணே!
மாற்றம் வேணும் பெண்ணே!
புத்தம் புது சிந்தனைகள்
பிறக்க வேண்டும் கண்ணே!
நேற்று செயலை பாரு
மாற்றம் என்ன கூறு
வெற்றி பெற்று வந்த பின்னே
ஒளியும் பிறக்கும் ஜோரு


Wednesday, April 22, 2026

பாடல் - 56 : ஆடை சுதந்திரம் கேட்டிடும் பெண்ணே

April 22, 2026








ஆடை சுதந்திரம் 
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு 
மேல்ஆடை எப்படி 
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
ஆடை சுதந்திரம் 
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு 
மேல்ஆடை எப்படி 
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
முலைவரிச் சட்டம் 
இருந்த காலத்தில்
மேலாடை உனக்கில்லை
நாங்கேலி பெண்ணால் 
வந்தது ஆடை
சுதந்திரமாய்ப் போடு

ஆடை சுதந்திரம் 
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு 
மேல் ஆடை எப்படி 
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு

ஆணுக்கு இணையாய் 
போட்டிகள் போட்டு
வெற்றிகாணும் பெண்ணே
ஆடையில் மட்டும் 
போட்டிகள் வேண்டாம்
விட்டுவிடு கண்ணே
ஆணுக்கு இணையாய் 
போட்டிகள் போட்டு
வெற்றிகாணும் பெண்ணே
ஆடையில் மட்டும் 
போட்டிகள் வேண்டாம்
விட்டுவிடு கண்ணே
ஒற்றை ஆடையில்
ஆணைக் கண்டு
பழகிகொண்ட ஊரு
பெண்ணின் ஆடை
குறைந்தது என்றால்
கேலிசெய்யும் பாரு
கவர்ச்சி என்பது
உடையில் அல்ல
பார்வை எனசொல்வாய்
குழந்தை முதலாய்
அப்படி இருந்தால்
குறை சொல்வதில்லை

ஆடை சுதந்திரம் 
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு 
மேல் ஆடை எப்படி 
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு

மனபலமோ உடல்பலமோ
ஆணுக்கு இணையில்லை
பருவங்களும் வளர்ச்சிகளும்
இருவர்க்கும் ஒன்றில்லை
மனபலமோ உடல்பலமோ
ஆணுக்கு இணையில்லை
பருவங்களும் வளர்ச்சிகளும்
இருவர்க்கும் ஒன்றில்லை
கல்வியிலும் தொழில்களிலும்
இருவரும் சமம்தானே
குடும்பத்திலும் வளர்ச்சியிலும்
இருவரும் இணைதானே
போட்டிகளைப் பிறவற்றில்
காட்டுதல் மிகநன்று
வானுயரம் புகழ்படைத்து
உயர்ந்திடு நீவென்று

ஆடை சுதந்திரம் 
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு 
மேல்ஆடை எப்படி 
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
ஆடை சுதந்திரம் 
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு 
மேல்ஆடை எப்படி 
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
முலைவரிச் சட்டம் 
இருந்த காலத்தில்
மேலாடை உனக்கில்லை
நாங்கேலி பெண்ணால் 
வந்தது ஆடை
சுதந்திரமாய்ப் போடு

ஆடை சுதந்திரம் 
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு 
மேல் ஆடை எப்படி 
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு




சாமி பாடல்
குத்துப்பாட்டு
மெல்லிசை பாடல்
உற்சாகமான பாடல்
உச்சக்குரல் பாடல்
ஆண் மெல்லிசை பாடல்

ஆண் குரல் பாடல்
பெண் குரல் பாடல்
குழு குரல் பாடல்
குழு பாடல்


Wednesday, April 15, 2026

பாடல் - 55 : பார்த்த உடனே காதல் கொண்டு

April 15, 2026


பார்த்த உடனே காதல் கொண்டு
துணையைத் தேடும் மனிதா!
பழகப் பழக எல்லாம் புரியும்
பழகிப் பாரு மனிதா!
தூர இருக்கும் நெறிஞ்சிப் பூவும்
கண்ணுக் கழகாய் இருக்கும்
ரோஜா கூட முள்ளை வைத்து
உள்ளம் கட்டி இழுக்கும்

பார்த்த உடனே காதல் கொண்டு
துணையைத் தேடும் மனிதா!
பழகப் பழக எல்லாம் புரியும்
பழகிப் பாரு மனிதா!

தேனை சுரந்து பருவப் பூக்கள்
அழகு காட்டி அழைக்கும்
மலரின் அழகில் மயங்கும் வண்டோ!
தேனை உண்ணப் பழகும்
பழகும் போது தெரிவ தில்லை
பூவின் உண்மை மணமே
சொந்தம் கொண்டு வாழும் போது
தெரியும் அதனின் குணமே
எல்லாப் பூவும் இதுபோல் இல்லை
அறிந்து பழக வேண்டும்
மோகம் கொண்டு பழக வேண்டாம்
அமைதி காத்தல் வேண்டும்.

பார்த்த உடனே காதல் கொண்டு
துணையைத் தேடும் மனிதா!
பழகப் பழக எல்லாம் புரியும்
பழகிப் பாரு மனிதா!

கவர்ச்சி இன்றி பூக்கும் பூக்கள்
வாசம் வைத்து இருக்கும்
பூக்கள் கண்டு அள்ளி அணைக்க
உள்ளம் இனிமை பயக்கும்
கொடியின் மலரோ? செடியின் மலரோ?
வகைமை காண வேண்டாம்
உனக்குப் புடித்த பூவைக் கண்டு
உள்ளம் சேர்க்க வேண்டும்
ஒன்றுக் கொன்று விட்டுக் கொடுத்து
குடும்பம் நடத்த வேண்டும்
உறவுக் கண்டு உரிமை கொண்டு
இல்லம் தழைக்க வேண்டும்.

பார்த்த உடனே காதல் கொண்டு
துணையைத் தேடும் மனிதா!
பழகப் பழக எல்லாம் புரியும்
பழகிப் பாரு மனிதா!
தூர இருக்கும் நெறிஞ்சிப் பூவும்
கண்ணுக் கழகாய் இருக்கும்
ரோஜா கூட முள்ளை வைத்து
உள்ளம் கட்டி இழுக்கும்

பார்த்த உடனே காதல் கொண்டு
துணையைத் தேடும் மனிதா!
பழகப் பழக எல்லாம் புரியும்
பழகிப் பாரு மனிதா!

Thursday, April 9, 2026

பாடல் - 52 : அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே

April 09, 2026


அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே
அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே
சிந்தையில் உதித்ததை செயல்களாய்ச் செய்தோமே
சகோதர சகோதரி உறவுதனைப் பெற்றோமே

அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே

உதிரத்தின் உறவாக உடன்வந்துப் பிறந்தோமே
உறவோடு உறவாக ஒன்றாக வளர்ந்தோமே
ஒருகூட்டுப் பறவையாய் சிறைபட்டு இருந்தோமே
உணவள்ளி இருகையில் ஒன்றாக உண்டோமே
உனக்கென்றும் எனக்கென்றும் உடன்கேட்டுப் பெற்றோமே
கருத்துக்குள் துணையாகி ஒன்றாகி நின்றோமே
கைகோர்த்து இணையாகப் பயணங்கள் செய்தோமே
ஒன்றான பாசத்தில் ஒன்றாகி வெல்வோமே 

அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே

இருவீடு என்றாலும் என்னென்றும் தொடர்வோமே
இருக்கின்ற நாளெல்லாம் இன்பமாய் வாழ்வோமே
இன்பங்கள் துன்பங்கள் இருவரும் பகிர்வோமே
உறவுக்குள் கைகோர்த்து உயிர்வரை நிற்போமே
பொருள்ஒரு பொருளல்ல புறம்தூக்கி எறிவோமே
புன்னகையும் புதுப்பொலிவும் இருவரும் பகிர்வோமே
புதுமைகள் பலசெய்து உறவுகள் வளர்ப்போமே
புவியினில் இன்பமாய் இருவரும் இருப்போமே

அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே
அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே
சிந்தையில் உதித்ததை செயல்களாய்ச் செய்தோமே
சகோதர சகோதரி உறவுதனைப் பெற்றோமே

Wednesday, April 8, 2026

பாடல் - 50 : கண்மணியே! கவிமணியே!

April 08, 2026


கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே! 
மனம்நிறைந்த தேன்சுவையே 
கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே! 
மனம்நிறைந்த தேன்சுவையே 
தாளங்கள் இசையோடு 
என்மனதும் ஆடுதடி 
கண்ணுறங்கும் நேரத்திலும் 
உன்அழகை தேடுதடி

கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே 
மனம்நிறைந்த தேன்சுவையே! 

காற்றோடு போகின்ற 
கருமேகம் போல்உந்தன் 
பின்னாலே போகுதடி 
கேளாமல் என்மனசு 
ஊற்றோடு வருகின்ற 
சிறுமணல்போல் புன்னகையும் 
புதுப்பார்வை கண்ணசைவும் 
சொன்னதடி உன்மனசு 
காற்றுவர தலையாட்டும் 
மரம்போல என்அன்பில் 
நீ உருகி உளம்சேர 
பாடுகிறேன் புதுதெம்பில்

கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே! 
மனம்நிறைந்த தேன்சுவையே 

பாதங்கள் நோகுமென்று 
பூப்பாதை அமைத்துவைத்தேன் 
முழுநிலவும் சுடுமென்று 
என்மனதை திறந்துவைத்தேன் 
பூவிரியும் சிரிப்பழகி 
பொன்மாலை நிலவழகி 
செம்மைநிலம் விளைந்திட்ட 
முற்றியநெல் கதிரழகி 
அடியெடுத்து தென்றலைப்போல் 
என்மனதுள் வருவாயோ? 
மனமெல்லாம் மகிழ்ந்திடவே 
புதுசுகங்கள் தருவாயோ?

கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே! 
மனம்நிறைந்த தேன்சுவையே 
கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே! 
மனம்நிறைந்த தேன்சுவையே 
தாளங்கள் இசையோடு 
என்மனதும் ஆடுதடி 
கண்ணுறங்கும் நேரத்திலும் 
உன்அழகை தேடுதடி

கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே 
மனம்நிறைந்த தேன்சுவையே 

Friday, April 3, 2026

பாடல் - 47 : பழனியப்பா பழனியப்பா

April 03, 2026


பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
தாய் மீது அன்பு வைத்து 
தொண்டுகள் செய்பவரே 
தமிழ்மகளை அலங்கரிக்க 
பூமியில் பிறந்தவரே 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 

கல்லூறும் நீர்போல 
உறவுகள் கொண்டவரே 
அனல்பட்ட நெய்யாக 
இரங்கிடும் மன்னவரே
தமிழ்ஊரில் தமிழ்த்தெருவில்
தமிழ்வளர்க்கும் மூத்தவரே
தோழமைகள் துணைக்கொண்டு 
பயணங்கள் செய்பவரே 
சிங்கத்தின் கர்ஜனைகள் 
செயல்களை செய்யவைக்கும் 
உணவு ஊட்டும் தாயாக 
கருணையும் கொண்டிருக்கும் 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 

ஒருநொடியும் உறங்காத 
சிந்தனை உடையவரே 
சூரியனாய் உன்னோடு 
இயங்கிட வைப்பவரே 
திறமைக்கு மதிப்புத்தந்து
கொண்டாடி மகிழ்பவரே 
புறம்பேசி வருபவரை 
புறம்தள்ளி விடுபவரே
பருவங்கள் மாறினாலும் 
மாறாது உன்அன்பு 
நினைத்ததை முடித்திடுவாய்
நம்பிக்கை உன்தெம்பு 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
தாய் மீது அன்பு வைத்து 
தொண்டுகள் செய்பவரே 
தமிழ்மகளை அலங்கரிக்க 
பூமியில் பிறந்தவரே 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 

high pitch male vocals- உயர் சுருதி ஆண் குரல்கள்

synth techno - சின்த் டெக்னோ

Bouncing music - துள்ளல் இசை

Dabangtu -டப்பாங்குத்து

நாட்டுப்புறப் பாடல் - Folk song

உணர்ச்சி மிகுந்த பாடல் - Emotional song

zen

Friday, March 20, 2026

தந்தைக்கும் கண்ணீர் வரும்

March 20, 2026
தந்தைக்கும் கண்ணீர் வரும்
தந்தைக்கும் கண்ணீர் வரும் 
தன்னுள்ளும் ஆசை எழும் 
தன்பிள்ளை கலங்கும் போது 
உயிரோடு உதிரம் விழும் 
நாட்டுக்காய் உழைத்த போதும் 
வீட்டுக்குள் நினைப்பு வரும் 
குடும்பத்தை வளர்த்தெடுக்க 
ஆசைகள் தியாகம் பெறும்










கண்ணடித்து கண்ணடித்து 
காதல் சொல்லி போனவள்

பாடல் - 49 : கொலை கொலை கொலை

March 20, 2026


கொலை கொலை கொலை 
நாட்டு மக்கள் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 
கொலை கொலை கொலை 
நாட்டு மக்கள் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 
போர் என்னும் பேரிலே 
நாட்டு மக்கள் அழிப்பது 
கொலையில் ஒன்றுதானடா
கொடுமை எங்கு பாரடா 

கொலை கொலை கொலை 
நாடு செய்யும் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 
 
தினம் தினம் சாகிறார் 
குற்றம் இன்றி சாகிறார் 
நாட்டில் வந்து பிறந்ததாலே
குடும்பத்தோடு சாகிறார்  
இரண்டு நாட்டுத் தலைவர்கள் 
ஆண வத்தின் பேரிலேயே 
இரண்டு நாட்டு மக்களும் 
குண்டு பட்டு சாவதா 
இரண்டு நாட்டுத் தலைவர்கள் 
ஆண வத்தின் பேரிலேயே 
இரண்டு நாட்டு மக்களும் 
குண்டு பட்டு சாவதா 
விலங்குகளைப் போலவே 
கொன்று மாய்த்து குவிக்கிறார் 
மக்கள் மாண்ட பின்னரே 
என்ன செய்யப் போகிறார். 

கொலை கொலை கொலை 
நாடு செய்யும் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 

வேண்டும் அமைதி வேண்டுமே 
வேண்டு கின்றேன் கடவுளை 
வேண்டும் ஒரு சுதந்திரம் 
ஆட்சி செய்வோர் கையினால் 
வேண்டும் அமைதி வேண்டுமே 
வேண்டு கின்றேன் கடவுளை 
வேண்டும் ஒரு சுதந்திரம் 
ஆட்சி செய்வோர் கையினால் 
மண்ணில் வந்து பிறக்கிறோம் 
மனித னாக வாழ்கிறோம் 
எங்கள் பிழைப்பு எதுவென 
கண்டு செய்து பிழைக்கிறோம் 
உதவி கேட்கவில்லையே 
அழித்திடாதீர் எங்களைப் 
உங்களைப்போல் நாங்களும் 
மண்ணில் வாழ வேண்டுமே

கொலை கொலை கொலை 
நாட்டு மக்கள் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 
போர் என்னும் பேரிலே 
நாட்டு மக்கள் அழிப்பது 
கொலையில் ஒன்றுதானடா
கொடுமை எங்கு பாரடா 

கொலை கொலை கொலை 
நாடு செய்யும் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 

Thursday, March 19, 2026

செஞ்சோற்றுக்கடன்

March 19, 2026
செஞ்சோற்றுக்கடன்

செஞ்சோற்றுக்கடன் என்பது, ஒருவருக்கு உணவளித்து ஆதரித்த மன்னன் அல்லது தலைவனுக்காக, அவர் செல்லும் வழி தவறு என்று தெரிந்தும், நன்றிக்கடனுக்காக அவருடன் நின்று போரிட்டு உயிர் தியாகம் செய்வதைக் குறிக்கும். இது முக்கியமாக மகாபாரதத்தில் கர்ணன் துரியோதனனுக்காகப் போரிட்டதை விளக்கப் பயன்படும் ஒரு மரபுத்தொடர்

Friday, March 13, 2026

சிப்பிக்குள் முத்து இருக்கு

March 13, 2026
சிப்பிக்குள் முத்து இருக்கு
சிப்பிக்குள் முத்து இருக்கு
சின்னவளே அன்  இருக்கு
எண்ணம் போல வாழ்  இருக்கு 
சேர்ந்திடவே காலம் இருக்கு

வாழ்க்கை என்னும் தேரில் ஏறி 
வாழ்ந்திடலாம் வானம் தாண்டி 
மூத்த வங்க சேர்த்து வைக்க 
சேர்ந்திடலாம் நாமும் தாண்டி 

கண்ணுக்குள்ளே கண்ணவச்சு 
காத்திடுவேன் நெஞ்சுக்குள்ள 
காலம் நேரம் சேர்த்து வைக்க 
சேர்ந்திடலாம் கூட்டுக் குள்ள

என்ன போல நல்ல புள்ள
ஊருக்குள்ள யாரும் இல்லை
உன்னுடைய நெஞ்சுக்குள்ள 
நான் மட்டுமே சொந்த புள்ள








Saturday, March 7, 2026

பாடல் - 53 : பெண்ணின் உள்ளம் கருணை கோவில்

March 07, 2026

பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே 
சொர்க்க வாயில் 
பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே 
சொர்க்க வாயில் 
ஆணின் வலிமை 
பெற்று இருப்பாள் 
அன்பு வடிவம் 
கொண்டு இருப்பாள் 

பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே 
சொர்க்க வாயில்

பெண்ணை சுற்றியே 
உலகம் இயங்கும் 
கருணை இரக்கம் 
அவளின் சுரங்கம்
பெண்ணை சுற்றியே 
உலகம் இயங்கும் 
கருணை இரக்கம் 
அவளின் சுரங்கம்
பெண்ணின் அணிகலன் 
பெண்மை குணமே
ஊக்கம் அளிப்பது 
அவளின் இனமே
பெண்ணின் அணிகலன் 
பெண்மை குணமே
ஊக்கம் அளிப்பது 
அவளின் இனமே
பெண்ணின் ஒழுக்கம்
நாட்டின் ஒழுக்கம் 
பெண்மை மிதிக்க 
வாழ்க்கை வழுக்கும் 

பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே 
சொர்க்க வாயில்

ஆணுக்கு இணையாய் 
மதிக்க வேண்டும் 
அவளின் அறிவை 
துதிக்க வேண்டும் 
ஆணுக்கு இணையாய் 
மதிக்க வேண்டும் 
அவளின் அறிவை 
துதிக்க வேண்டும் 
பெண்ணை மதித்தால் 
தேவதை வருவாள் 
அன்பை அள்ளி 
அவளும் தருவாள் 
பெண்ணை மதித்தால் 
தேவதை வருவாள் 
அன்பை அள்ளி 
அவளும் தருவாள்
பெண்கள் காத்து 
உள்ளம் பூப்போம் 
அவளின் சொல்லை 
அன்பாய் கேட்போம்

பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே 
சொர்க்க வாயில் 
ஆணின் வலிமை 
பெற்று இருப்பாள் 
அன்பு வடிவம் 
கொண்டு இருப்பாள் 

பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே
சொர்க்க வாயில்





சேருங்க நீங்க சேருங்க

March 07, 2026
சேருங்க நீங்க சேருங்க
சேருங்க நீங்க சேருங்க - நம்ம
அரசு பள்ளியில் சேருங்க 
பாருங்க நீங்க பாருங்க - உங்க 
பிள்ளை ஜெயிக்கும் பாருங்க 
சேருங்க நீங்க சேருங்க - நம்ம
அரசு பள்ளியில் சேருங்க 
பாருங்க நீங்க பாருங்க - உங்க 
பிள்ளை ஜெயிக்கும் பாருங்க 

எட்டு திசையிலும் அரசு பிள்ளைங்க 
சாதனை படைத்து வருகுது 
சுற்றும் சூரியனும் நம்ம பிள்ளைகளின் 
வெற்றி செய்தியினைப் பரப்புது 
எட்டு திசையிலும் அரசு பிள்ளைங்க 
சாதனை படைத்து வருகுது 
சுற்றும் சூரியனும் நம்ம பிள்ளைகளின் 
வெற்றி செய்தியினைப் பரப்புது 

சேருங்க நீங்க சேருங்க - நம்ம
அரசு பள்ளியில் சேருங்க 
பாருங்க நீங்க பாருங்க - உங்க 
பிள்ளை ஜெயிக்கும் பாருங்க 

உங்க பிள்ளை ஜெயித்திட 
எங்களோடு வாருங்கள்
காசு பணம் தேவையில்லை 
இங்க வந்து சேருங்கள் 

நோட்டு புத்தகமும் கொடுக்கிறோம்
போடும் துணிமணி கொடுக்கிறோம்
பாட்டு கதையும் நடத்துறோம்
காட்சிப்படுத்தியே நடத்துறோம்