Thursday, April 9, 2026

பாடல் - 52 : அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே

April 09, 2026


அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே
அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே
சிந்தையில் உதித்ததை செயல்களாய்ச் செய்தோமே
சகோதர சகோதரி உறவுதனைப் பெற்றோமே

அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே

உதிரத்தின் உறவாக உடன்வந்துப் பிறந்தோமே
உறவோடு உறவாக ஒன்றாக வளர்ந்தோமே
ஒருகூட்டுப் பறவையாய் சிறைபட்டு இருந்தோமே
உணவள்ளி இருகையில் ஒன்றாக உண்டோமே
உனக்கென்றும் எனக்கென்றும் உடன்கேட்டுப் பெற்றோமே
கருத்துக்குள் துணையாகி ஒன்றாகி நின்றோமே
கைகோர்த்து இணையாகப் பயணங்கள் செய்தோமே
ஒன்றான பாசத்தில் ஒன்றாகி வெல்வோமே 

அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே

இருவீடு என்றாலும் என்னென்றும் தொடர்வோமே
இருக்கின்ற நாளெல்லாம் இன்பமாய் வாழ்வோமே
இன்பங்கள் துன்பங்கள் இருவரும் பகிர்வோமே
உறவுக்குள் கைகோர்த்து உயிர்வரை நிற்போமே
பொருள்ஒரு பொருளல்ல புறம்தூக்கி எறிவோமே
புன்னகையும் புதுப்பொலிவும் இருவரும் பகிர்வோமே
புதுமைகள் பலசெய்து உறவுகள் வளர்ப்போமே
புவியினில் இன்பமாய் இருவரும் இருப்போமே

அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே
அன்னையின் தந்தையின் உயிர்வழி வந்தோமே
மண்ணிலே மனிதராய் உறவுகள் கொண்டோமே
சிந்தையில் உதித்ததை செயல்களாய்ச் செய்தோமே
சகோதர சகோதரி உறவுதனைப் பெற்றோமே

Wednesday, April 8, 2026

பாடல் - 50 : கண்மணியே! கவிமணியே!

April 08, 2026


கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே! 
மனம்நிறைந்த தேன்சுவையே 
கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே! 
மனம்நிறைந்த தேன்சுவையே 
தாளங்கள் இசையோடு 
என்மனதும் ஆடுதடி 
கண்ணுறங்கும் நேரத்திலும் 
உன்அழகை தேடுதடி

கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே 
மனம்நிறைந்த தேன்சுவையே! 

காற்றோடு போகின்ற 
கருமேகம் போல்உந்தன் 
பின்னாலே போகுதடி 
கேளாமல் என்மனசு 
ஊற்றோடு வருகின்ற 
சிறுமணல்போல் புன்னகையும் 
புதுப்பார்வை கண்ணசைவும் 
சொன்னதடி உன்மனசு 
காற்றுவர தலையாட்டும் 
மரம்போல என்அன்பில் 
நீ உருகி உளம்சேர 
பாடுகிறேன் புதுதெம்பில்

கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே! 
மனம்நிறைந்த தேன்சுவையே 

பாதங்கள் நோகுமென்று 
பூப்பாதை அமைத்துவைத்தேன் 
முழுநிலவும் சுடுமென்று 
என்மனதை திறந்துவைத்தேன் 
பூவிரியும் சிரிப்பழகி 
பொன்மாலை நிலவழகி 
செம்மைநிலம் விளைந்திட்ட 
முற்றியநெல் கதிரழகி 
அடியெடுத்து தென்றலைப்போல் 
என்மனதுள் வருவாயோ? 
மனமெல்லாம் மகிழ்ந்திடவே 
புதுசுகங்கள் தருவாயோ?

கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே! 
மனம்நிறைந்த தேன்சுவையே 
கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே! 
மனம்நிறைந்த தேன்சுவையே 
தாளங்கள் இசையோடு 
என்மனதும் ஆடுதடி 
கண்ணுறங்கும் நேரத்திலும் 
உன்அழகை தேடுதடி

கண்மணியே! கவிமணியே! 
கள்ளூறும் பூச்சரமே! 
மின்மினியே முழுநிலவே 
மனம்நிறைந்த தேன்சுவையே 

Friday, April 3, 2026

பாடல் - 47 : பழனியப்பா பழனியப்பா

April 03, 2026


பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
தாய் மீது அன்பு வைத்து 
தொண்டுகள் செய்பவரே 
தமிழ்மகளை அலங்கரிக்க 
பூமியில் பிறந்தவரே 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 

கல்லூறும் நீர்போல 
உறவுகள் கொண்டவரே 
அனல்பட்ட நெய்யாக 
இரங்கிடும் மன்னவரே
தமிழ்ஊரில் தமிழ்த்தெருவில்
தமிழ்வளர்க்கும் மூத்தவரே
தோழமைகள் துணைக்கொண்டு 
பயணங்கள் செய்பவரே 
சிங்கத்தின் கர்ஜனைகள் 
செயல்களை செய்யவைக்கும் 
உணவு ஊட்டும் தாயாக 
கருணையும் கொண்டிருக்கும் 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 

ஒருநொடியும் உறங்காத 
சிந்தனை உடையவரே 
சூரியனாய் உன்னோடு 
இயங்கிட வைப்பவரே 
திறமைக்கு மதிப்புத்தந்து
கொண்டாடி மகிழ்பவரே 
புறம்பேசி வருபவரை 
புறம்தள்ளி விடுபவரே
பருவங்கள் மாறினாலும் 
மாறாது உன்அன்பு 
நினைத்ததை முடித்திடுவாய்
நம்பிக்கை உன்தெம்பு 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
தாய் மீது அன்பு வைத்து 
தொண்டுகள் செய்பவரே 
தமிழ்மகளை அலங்கரிக்க 
பூமியில் பிறந்தவரே 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 

high pitch male vocals- உயர் சுருதி ஆண் குரல்கள்

synth techno - சின்த் டெக்னோ

Bouncing music - துள்ளல் இசை

Dabangtu -டப்பாங்குத்து

நாட்டுப்புறப் பாடல் - Folk song

உணர்ச்சி மிகுந்த பாடல் - Emotional song

zen

Friday, March 20, 2026

தந்தைக்கும் கண்ணீர் வரும்

March 20, 2026
தந்தைக்கும் கண்ணீர் வரும்
தந்தைக்கும் கண்ணீர் வரும் 
தன்னுள்ளும் ஆசை எழும் 
தன்பிள்ளை கலங்கும் போது 
உயிரோடு உதிரம் விழும் 
நாட்டுக்காய் உழைத்த போதும் 
வீட்டுக்குள் நினைப்பு வரும் 
குடும்பத்தை வளர்த்தெடுக்க 
ஆசைகள் தியாகம் பெறும்










கண்ணடித்து கண்ணடித்து 
காதல் சொல்லி போனவள்

பாடல் - 49 : கொலை கொலை கொலை

March 20, 2026


கொலை கொலை கொலை 
நாட்டு மக்கள் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 
கொலை கொலை கொலை 
நாட்டு மக்கள் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 
போர் என்னும் பேரிலே 
நாட்டு மக்கள் அழிப்பது 
கொலையில் ஒன்றுதானடா
கொடுமை எங்கு பாரடா 

கொலை கொலை கொலை 
நாடு செய்யும் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 
 
தினம் தினம் சாகிறார் 
குற்றம் இன்றி சாகிறார் 
நாட்டில் வந்து பிறந்ததாலே
குடும்பத்தோடு சாகிறார்  
இரண்டு நாட்டுத் தலைவர்கள் 
ஆண வத்தின் பேரிலேயே 
இரண்டு நாட்டு மக்களும் 
குண்டு பட்டு சாவதா 
இரண்டு நாட்டுத் தலைவர்கள் 
ஆண வத்தின் பேரிலேயே 
இரண்டு நாட்டு மக்களும் 
குண்டு பட்டு சாவதா 
விலங்குகளைப் போலவே 
கொன்று மாய்த்து குவிக்கிறார் 
மக்கள் மாண்ட பின்னரே 
என்ன செய்யப் போகிறார். 

கொலை கொலை கொலை 
நாடு செய்யும் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 

வேண்டும் அமைதி வேண்டுமே 
வேண்டு கின்றேன் கடவுளை 
வேண்டும் ஒரு சுதந்திரம் 
ஆட்சி செய்வோர் கையினால் 
வேண்டும் அமைதி வேண்டுமே 
வேண்டு கின்றேன் கடவுளை 
வேண்டும் ஒரு சுதந்திரம் 
ஆட்சி செய்வோர் கையினால் 
மண்ணில் வந்து பிறக்கிறோம் 
மனித னாக வாழ்கிறோம் 
எங்கள் பிழைப்பு எதுவென 
கண்டு செய்து பிழைக்கிறோம் 
உதவி கேட்கவில்லையே 
அழித்திடாதீர் எங்களைப் 
உங்களைப்போல் நாங்களும் 
மண்ணில் வாழ வேண்டுமே

கொலை கொலை கொலை 
நாட்டு மக்கள் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 
போர் என்னும் பேரிலே 
நாட்டு மக்கள் அழிப்பது 
கொலையில் ஒன்றுதானடா
கொடுமை எங்கு பாரடா 

கொலை கொலை கொலை 
நாடு செய்யும் கொலை 
தலைவர் செய்யும் கொலை 
தரம் தாழ்ந்த கொலை 

Thursday, March 19, 2026

செஞ்சோற்றுக்கடன்

March 19, 2026
செஞ்சோற்றுக்கடன்

செஞ்சோற்றுக்கடன் என்பது, ஒருவருக்கு உணவளித்து ஆதரித்த மன்னன் அல்லது தலைவனுக்காக, அவர் செல்லும் வழி தவறு என்று தெரிந்தும், நன்றிக்கடனுக்காக அவருடன் நின்று போரிட்டு உயிர் தியாகம் செய்வதைக் குறிக்கும். இது முக்கியமாக மகாபாரதத்தில் கர்ணன் துரியோதனனுக்காகப் போரிட்டதை விளக்கப் பயன்படும் ஒரு மரபுத்தொடர்

Friday, March 13, 2026

சிப்பிக்குள் முத்து இருக்கு

March 13, 2026
சிப்பிக்குள் முத்து இருக்கு
சிப்பிக்குள் முத்து இருக்கு
சின்னவளே அன்  இருக்கு
எண்ணம் போல வாழ்  இருக்கு 
சேர்ந்திடவே காலம் இருக்கு

வாழ்க்கை என்னும் தேரில் ஏறி 
வாழ்ந்திடலாம் வானம் தாண்டி 
மூத்த வங்க சேர்த்து வைக்க 
சேர்ந்திடலாம் நாமும் தாண்டி 

கண்ணுக்குள்ளே கண்ணவச்சு 
காத்திடுவேன் நெஞ்சுக்குள்ள 
காலம் நேரம் சேர்த்து வைக்க 
சேர்ந்திடலாம் கூட்டுக் குள்ள

என்ன போல நல்ல புள்ள
ஊருக்குள்ள யாரும் இல்லை
உன்னுடைய நெஞ்சுக்குள்ள 
நான் மட்டுமே சொந்த புள்ள








Saturday, March 7, 2026

பாடல் - 53 : பெண்ணின் உள்ளம் கருணை கோவில்

March 07, 2026

பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே 
சொர்க்க வாயில் 
பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே 
சொர்க்க வாயில் 
ஆணின் வலிமை 
பெற்று இருப்பாள் 
அன்பு வடிவம் 
கொண்டு இருப்பாள் 

பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே 
சொர்க்க வாயில்

பெண்ணை சுற்றியே 
உலகம் இயங்கும் 
கருணை இரக்கம் 
அவளின் சுரங்கம்
பெண்ணை சுற்றியே 
உலகம் இயங்கும் 
கருணை இரக்கம் 
அவளின் சுரங்கம்
பெண்ணின் அணிகலன் 
பெண்மை குணமே
ஊக்கம் அளிப்பது 
அவளின் இனமே
பெண்ணின் அணிகலன் 
பெண்மை குணமே
ஊக்கம் அளிப்பது 
அவளின் இனமே
பெண்ணின் ஒழுக்கம்
நாட்டின் ஒழுக்கம் 
பெண்மை மிதிக்க 
வாழ்க்கை வழுக்கும் 

பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே 
சொர்க்க வாயில்

ஆணுக்கு இணையாய் 
மதிக்க வேண்டும் 
அவளின் அறிவை 
துதிக்க வேண்டும் 
ஆணுக்கு இணையாய் 
மதிக்க வேண்டும் 
அவளின் அறிவை 
துதிக்க வேண்டும் 
பெண்ணை மதித்தால் 
தேவதை வருவாள் 
அன்பை அள்ளி 
அவளும் தருவாள் 
பெண்ணை மதித்தால் 
தேவதை வருவாள் 
அன்பை அள்ளி 
அவளும் தருவாள்
பெண்கள் காத்து 
உள்ளம் பூப்போம் 
அவளின் சொல்லை 
அன்பாய் கேட்போம்

பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே 
சொர்க்க வாயில் 
ஆணின் வலிமை 
பெற்று இருப்பாள் 
அன்பு வடிவம் 
கொண்டு இருப்பாள் 

பெண்ணின் உள்ளம் 
கருணை கோவில் 
அவளின் சொல்லே
சொர்க்க வாயில்

சேருங்க நீங்க சேருங்க

March 07, 2026
சேருங்க நீங்க சேருங்க
சேருங்க நீங்க சேருங்க - நம்ம
அரசு பள்ளியில் சேருங்க 
பாருங்க நீங்க பாருங்க - உங்க 
பிள்ளை ஜெயிக்கும் பாருங்க 
சேருங்க நீங்க சேருங்க - நம்ம
அரசு பள்ளியில் சேருங்க 
பாருங்க நீங்க பாருங்க - உங்க 
பிள்ளை ஜெயிக்கும் பாருங்க 

எட்டு திசையிலும் அரசு பிள்ளைங்க 
சாதனை படைத்து வருகுது 
சுற்றும் சூரியனும் நம்ம பிள்ளைகளின் 
வெற்றி செய்தியினைப் பரப்புது 
எட்டு திசையிலும் அரசு பிள்ளைங்க 
சாதனை படைத்து வருகுது 
சுற்றும் சூரியனும் நம்ம பிள்ளைகளின் 
வெற்றி செய்தியினைப் பரப்புது 

சேருங்க நீங்க சேருங்க - நம்ம
அரசு பள்ளியில் சேருங்க 
பாருங்க நீங்க பாருங்க - உங்க 
பிள்ளை ஜெயிக்கும் பாருங்க 

உங்க பிள்ளை ஜெயித்திட 
எங்களோடு வாருங்கள்
காசு பணம் தேவையில்லை 
இங்க வந்து சேருங்கள் 

நோட்டு புத்தகமும் கொடுக்கிறோம்
போடும் துணிமணி கொடுக்கிறோம்
பாட்டு கதையும் நடத்துறோம்
காட்சிப்படுத்தியே நடத்துறோம்

Thursday, February 26, 2026

ஆசைப்பட்டு மனைவி

February 26, 2026
ஆசைப்பட்டு மனைவி
ஆசைப்பட்டு மனைவி 
அன்போடு கேட்டால் 
உயிரைத் தந்து கூட 
பெற்றுத் தருதல் வேண்டும்

நேசம் கொண்ட குழந்தை 
தவறு செய்த போதும் 
பிள்ளை மனம் நோகா 
நடந்து கொள்ள வேண்டும் 

அன்னை தந்தை செயல்கள் 
துன்பம் தந்த போதும் 
வயது எண்ணி அவர்மேல் 
அன்பு காட்ட வேண்டும். 

உலகம் உனது எண்ணம் 
போல நடப்பதில்லை 
ஆற்று நீரில் பயணம் 
செய்து கரையைச் சேரு

பாடல் - 51 : காக்க வேண்டும் சாமி

February 26, 2026

காக்க வேண்டும் சாமி என்னைக் 
காக்க வேண்டும் சாமி 
சொந்த பந்தம் யாரும் இல்ல 
காக்க வேண்டும் சாமி 
காக்க வேண்டும் சாமி என்னைக் 
காக்க வேண்டும் சாமி 
சொந்த பந்தம் யாரும் இல்ல 
காக்க வேண்டும் சாமி 
பார்க்க வேண்டும் சாமி என்னைப் 
பார்க்க வேண்டும் சாமி 
கருணை பார்வை கொண்டு என்னைப் 
பார்க்க வேண்டும் சாமி 

காக்க வேண்டும் சாமி என்னைக் 
காக்க வேண்டும் சாமி 
சொந்த பந்தம் யாரும் இல்ல 
காக்க வேண்டும் சாமி 

சொந்த பந்தம் எல்லாம் 
உறவை பார்ப்பதில்லை 
பணத்தை நம்பி தானே 
உறவும் தேடி வருது 
சொந்த பந்தம் எல்லாம் 
உறவை பார்ப்பதில்லை 
பணத்தை நம்பி தானே 
உறவும் தேடி வருது 
பணம் இல்லா மனிதன் 
பழம் இல்லா மரம்தான் 
காய்ந்த குளத்தை நம்பி 
எந்த உயிரும் இல்லை. 
பணம் இல்லா மனிதன் 
பழம் இல்லா மரம்தான் 
காய்ந்த குளத்தை நம்பி 
எந்த உயிரும் இல்லை.

காக்க வேண்டும் சாமி என்னைக் 
காக்க வேண்டும் சாமி 
சொந்த பந்தம் யாரும் இல்ல 
காக்க வேண்டும் சாமி 

காசு இல்லாத வாழ்க்கை 
காட்டு வழிப் பயணம் 
என்ன நடக்கும் என்று 
யாரும் சொன்னதில்லை 
காசு இல்லாத வாழ்க்கை 
காட்டு வழிப் பயணம் 
என்ன நடக்கும் என்று 
யாரும் சொன்னதில்லை 
அன்பு பாசம் எல்லாம் 
காய்ந்த ஆறு தானே 
நீரைக் கொண்டு நிரப்ப 
யாரும் வருதல் இல்லை
அன்பு பாசம் எல்லாம் 
காய்ந்த ஆறு தானே 
நீரைக் கொண்டு நிரப்ப 
யாரும் வருதல் இல்லை

காக்க வேண்டும் சாமி என்னைக் 
காக்க வேண்டும் சாமி 
சொந்த பந்தம் யாரும் இல்ல 
காக்க வேண்டும் சாமி 
பார்க்க வேண்டும் சாமி என்னைப் 
பார்க்க வேண்டும் சாமி 
கருணை பார்வை கொண்டு என்னைப் 
பார்க்க வேண்டும் சாமி 

காக்க வேண்டும் சாமி என்னைக் 
காக்க வேண்டும் சாமி 
சொந்த பந்தம் யாரும் இல்ல 
காக்க வேண்டும் சாமி 

Saturday, February 21, 2026

தேரேறி வீதிவரும் அங்காளம்மா!

February 21, 2026
தேரேறி வீதிவரும் அங்காளம்மா!
தேரேறி வீதிவரும் அங்காளம்மா! 
தேடிவரும் பக்தர்களின் குறைதீரம்மா! 
கணவரின் சாபத்தை நீக்கிடவே
புத்தாக மலையனூரில் இருந்தவளே 


சாபத்தை போக்கிடவே மலையனூரில்
புத்தாக தவமிருந்த பார்வதியே
கணவனின் துன்பத்தை மீட்டவளே


சாபத்தை போக்கிட வந்தவளே!
சாமுண்டியான பார்வதியே!
எங்கள் குறை தீர்ந்திடவே உன்னைதேடி




கணவரின் சாபம் தீர்க்க வந்த தேவியே
வணங்கிடும் பக்தர்களின் துன்பம் போக்கியே
உலவிடம் காற்று போல எங்கும் இருப்பவள்

Friday, February 20, 2026

காக்கைபாடினியம் நூல் அறிமுகம்

February 20, 2026
காக்கைபாடினியம் நூல் அறிமுகம்
முனைவர் க. அரிகிருஷ்ணன்
பொருளாளர்
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்


காக்கைபாடினியம்
காக்கைபாடினியர்

காக்கைபாடினியர் யார்?


காக்கைபாடினியம் 
மறைந்து போல நூல்களுள் ஒன்றான காக்கைபாடினியம் யாப்பருங்கல விருத்தி உரையால் உருவான ஒரு நூல். 
இது யாப்பிலக்கணம் மட்டும் கூறும் நூல்

கிடைக்கப்பெற்ற காக்கைபாடினிய நூற்பாக்கள் 76 அதன் அடிகள் 216


1. உறுப்பியல் 
  1. எழுத்து - 13
  2. அசை - 2
  3. சீர் 
  4. தளை 
  5. அடி 
  6. தொடை 
1. எழுத்து (13)
  1. குறில்
  2. நெடில்
  3. அளபெடை
  4. உயிர்
  5. மெய்
  6. உயிர்மெய்
  7. வல்லினம்
  8. மெல்லினம்
  9. இடையினம்
  10. ஆய்தம்
  11. குற்றியலிகரம்
  12. குற்றியலுகரம்
  13. ஐகாகரக்குறுக்கம் (நூ. 1)
எழுத்துகளின் சிறப்பு விதிகள்
  • ஆய்தம், ஒற்று இரண்டு எழுத்துகளும் அளபெடுக்கும் போது மட்டும் அலகு பெறும் (நூ. 2)
  • குற்றியலிகரம், குற்றியலுகரம் இரண்டும் சீரும் தளையும் சிதைகின்ற காலத்து அளகு பெறாது. ஒற்றெழுத்து போலவே கருதப்படும். (நூ. 3)
  • உயிரளபெடை சீரும் தளையும் சிதைகின்ற காலத்து நெடில் எழுத்தாக மட்டுமே அலகு  பெறும். (நூ. 4)
2. அசை  
  1. தனியசை - நேரசை
  2. இணையசை - நிரையசை(நூ. 5)
  • ஒற்றெழுத்துக்கள் நீங்களாக தனித்து வரும் அசை - தனியசை
  • இரண்டு எழுத்துகள் இணைந்து வரும் அசை - இணையசை
இணையசை ஆகாதவை  
  • நேடிலோடு நெடிலும் நெடிலோடு குறிலும் சேர்ந்து வரும் (ஆரா காடு) என்பன இணையசை ஆகாது. (நூ. 6)
ஐகாரத்திற்குச் சிறப்பு விதி  

முதலில் வரும் ஐ நெடிலாகவும் அதாவது தனியசையாகவும் இடை, கடை ஆகிய இடங்களில் வரும் ஐகாரம் குறிலாகவும் (இணையசையாகவும் கொள்ளுதல் வேண்டும். (நூ.7)

3. சீர்

ஆசிரிய உரிச்சீர்

ஈரசைகளால் வரும் நான்கு சீரும் இயற்சீர் எனப்படும்.(நூ. 8)
  1. நேர் நேர்
  2. நிரை நேர்
  3. நிரை நிரை
  4. நேர் நிரை
இயற்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் ஆசிரிய உரிச்சீராகும்.(நூ. 9)

வெண்பா, வஞ்சி உரிச்சீர்கள்

மூவசைகளாக வரும் எட்டு சீர்களுள் தனி (நேர்) அசைகளாக வரும் நான்கும் வெண்பா உரிச்சீராகவும் இணை (நிரை) அசைகளாக வரும் நான்கும் வஞ்சி உரிச்சீராகவும் கொள்ளப்படும். (நூ. 10)

வெண்பா உரிச்சீர்கள்

நேர் நேர் நேர் - தேமாங்காய்
நிரை நேர் நேர் - புளிமாங்காய்
நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நேர் நிரை நேர் - கூவிளங்காய்

வஞ்சி உரிச்சீர்கள்

நேர் நேர் நிரை - தேமாங்கனி
நிரை நேர் நிரை - புளிமாங்கனி
நிரை நிரை நிரை - கருவிளங்கனி
நேர் நிரை நிரை - கூவிளங்கனி

இயற்சீர், உரிச்சீர் வரும் இடங்கள்

இயற்சீர், உரிச்சீர் என்பன நால்வகைப் பாக்களிலும் மூன்று இனங்களிலும் மயங்கி வரும். (நூ. 11)

இயற்சீர், உரிச்சீர் வரும் இடங்களுக்கான சிறப்பு விதி

ஆசிரியப்பா, வெண்பா ஆகிய இரண்டிலும் ஆசிரிய உரிச்சீரான இயற்சீரும் வெண்பா உரிச்சீர்களான காய்ச்சீரும் விரவி வரும்.

கலிப்பா, வஞ்சிப்பாக்களில் தனி அசையில் முடியும் (மாச்சீர்) வாரா.(நூ. 12)

மேலும் இணைசீர் நடுவாக உடைய ( நிரை நடுவாகிய ) விளங்கனிச் சீர்கள் ஆசிரியப்பாவில் வருதல் இல்லை.(நூ. 13)

நாலசைச்சீரும் ஒரசைச்சீரும்

தண்பூ, தண்நிழல், நறும்பூ, நறுநிழல் எனவரும் நாலசைச்சீர் (16), நேர், நிரை எனவரும் ஓரசைச்சீர்கள்(2) ஆகிய பதிணெட்டும் சிற்சில இலங்களில் வரும்.(நூ. 14)

நாலசைச்சீர்கள் செய்யுளில் வருமாறு

நாலசைச்சீர்கள் வஞ்சிப்பாவில் ஓரடியில் இரண்டு இணைந்தும் ஏனைய பாக்களில் ஒன்றாகவும் வரும். ஆயினும். நிரையென முடியும் நாலசைச்சீர்கள் வஞ்சிப்பாவிற்கே உரியதாகும். (நூ. 15)

தளை

இயற்சீர்கள் இரண்டும் கூடி தம்முள் விகற்பம் (மாறுபடாமல்) இல்லாமல் விரவி வருவன ஆசிரியத்தளை ஆகும்.(நூ. 16)

இயற்சீர் இரண்டும் தம்முள் ஒன்றாமல் வருவது இயற்சீர் வெண்டளை. (நூ. 17)

வெண்பா உரிச்சீரோடு ஒன்றி வருவது வெண்டளை. (நூ. 18)
வெண்பா உரிச்சீரோடு இணைசீர்(நிரை) ஒன்றுவது கலித்தளை. (நூ. 19)
இணையசை இறுதியாக உடைய மூவசைச்சீர்கள் தம்முள் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது வஞ்சித்தளை. (நூ. 20)

5. அடி

குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என அடி ஐந்து வகையாகும். (நூ. 21)

அடி அளவு

குறளடி - இருசீரடி
சிந்தடி - முச்சீரடி
அளவடி - நாற்சீரடி
நெடிலடி - ஐஞ்சீரடி
கழிநெடிலடி - அறுசீரடி(நூ. 22)

கழிநெடிலடிக்கு மேலும் ஒர் அளவு

எண்சீரடி, எழுசீரடியும் கழிநெடிலடியாகக் கொள்ளப்படும். (நூ. 23)

எண்சீரின் மிக்குவரும் கழிநெடிலடிகள்

இரண்டு சீர்கள் முதலாக எட்டு சீர்கள் ஈறாக உள்ள அடிகள் சிறப்புடையன. இந்த எட்டு சீரினும் மிகுந்து வரும் சீர்களால் உடைய அடிகள் சிறப்புடையன அல்ல. (நூ. 24)

வஞ்சிப்பாவிற்கு வரும் அடிகள்

சிந்தடி, குறளடி ஆகிய இரண்டும் வஞ்சிப்பாவிற்கு உரியன.  (நூ. 25)

அகவல், வெள்ளை, கலிப்பாக்களுக்கு வரும் அடிகள்

மூவகைப் பாக்களும் நாற்சீர் அடிகளைக் கொண்டு அமையும்.  (நூ. 26)
இந்த மூவகைப் பாக்களில் சிந்தடி, குறளடி வருதலும் உண்டு.  (நூ. 27)

பாவினங்களுக்கு வரும் அடிவகை

விருத்தம், துறை, தாழிசை எனப்படும் பாவினங்கள் மூன்றும் குறளடி முதலாக அனைத்து அடிகளாலும் அமையும்.   (நூ. 28)

பாக்களின் அடிச்சிறுமை

வெண்பா - இரண்டடி
ஆசிரியப்பா - மூன்றடி
வஞ்சிப்பா - மூன்றடி  (நூ. 29)
கலிப்பா - நான்கடி  (நூ. 30)

பாக்களின் அடிப் பெருமை

புலவலின் குறிப்பளவே பாக்களின் பெருமை அளவு (நூ. 31)

6. தொடை
  • எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றும் ஒருங்கு அமைந்து, அடியோடு அடி தொடுக்கப் பெறுதல் தொடை. (அடியோடு அடி கட்டுவது தொடை.) (நூ. 32)
அடிமோனை அடி எதுகைத் தொடைகள்
  • முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
  • இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
  • ஓர் எழுத்தின் வருக்கமும் இனமும் வந்து ஒன்றினும் மொனை எதுகை எனக் கொள்ளப்படும்.அதாவது இனமொனை வருக்கமோனை, இன எதுகை வருக்க எதுகை என்பன (நூ. 33)
எதுகைக்கு மேலும் ஒரு சிறப்பு விதி
  • ய்,ர்,ல்,ழ் ஆகிய நான்கு ஒற்றுகளும் எதுகையாக நிற்பது மட்டுமல்லாமல் மோனைக்கும் எதுகைக்கும் இடையில் வரின் அதனை ஆசிடை எதுகையாகக் கொள்ளப்படும். 
  • எடுத்துக்காட்டாக, காய்மாண்ட, பூமாண்ட ஆகிய இரண்டு சொற்களில் எதுகையாக மா வந்துள்ளது எனினும் முதல் சொல்லில் காய்மாண்ட என ய் ஒன்று வந்துள்ளது. இதனை எதுகையாகக் கொள்ளாமல் ஆசிடை எதுகையாகக் கொள்ள வேண்டும். (நூ. 34)
முரண்தொடை
  • அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்பட்டு வருவது முரண்தொடை எனப்படும். (நூ. 35)
இயைபுத்தொடை
  • அடிதோறும் இறுதி ஒன்றி வருவது இயைபுத் தொடையாகும். (நூ. 36)
அளபெடைத்தொடை
  • அடிதோறும் மாத்திரை அளபெடுத்து வருவது அளபெடைத்தொடை எனப்படும். (நூ. 37)
இணைத்தொடை
  • முதல் சீரும் இரண்டாம் சீரும் மோனை முதலாகத் தொடுப்பது இணைத்தொடை எனப்படும். (நூ. 38)
பொழிப்பு ஒரூஉ தொடைகள்
  • முதல்சீரும் மூன்றாம் சீரும் மோனை முதலாகத் தொடுப்பது பொழிப்புத்தொடை எனப்படும். (நூ. 39)
  • முதல்சீரும் நான்காம் சீரும் மோனை முதலாகத் தொடுப்பது ஒரூஉத்தொடை எனப்படும். (நூ. 39)
மேற்கதுவாய் கீழ்க்கதுவாய்த் தொடைகள்
  • ஒன்று, மூன்று, நான்கு ஆகிய சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது மேற்கதுவாய்த்தொடை எனப்படும். (நூ. 40)
  • ஒன்று, இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது கீழ்க்கதுவாய்த்தொடை எனப்படும். (நூ. 40)
கூழை, முற்று தொடைகள்
  • முதல் மூன்று  சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது கூழைத்தொடை எனப்படும். (நூ. 41)
  • அடியின் அனைத்து  சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது கூழைத்தொடை எனப்படும். (நூ. 41)
இரட்டைத் தொடை
  • அடி முழுவதும் ஒரே சீர் (சொல்) அடிமுழுதும் வருவது இரட்டைத் தொடை எனப்படும். (நூ. 42)
அந்தாதித் தொடை
  • அசையால் ஆயினும் சீரால் ஆயினும் அடிதோறும் இறுதிக்கண் நின்றது அடுத்த அடியின் முதலாக அமைவது அந்தாதித் தோடை எனப்படும்.(நூ. 43)
செந்தொடை
  • மோனை, எதுகை, இயைபு, முரண் போன்ற செயற்கையான தொடை நயங்கள் (அணிகள்) ஏதுமின்றி, சொற்களின் இயல்பான ஓசை நயத்தினால் அழகுற அமையும் செய்யுள் வகையாகும்.(நூ. 44)
  • செம்மை அடையாத தொடையை செந்தொடை  என்றனர்.
தொடைகளுக்கான சிறப்பு விதி
  • ஒரு செய்யுளில் பலவகைத் தொடைகளும் அடிகளும் வந்தால் அதன் முதலில் வந்த தொடையாலோ அடியாலோ அதற்குப் பெயரிட்டு கூறப்படும். (நூ. 45)
2. செய்யுளியல்

வெண்பாவும் அதன் வகையும்
  • சிறந்து உயர்ந்த செப்பலோசை அன்றி வேறு ஓசையால் வராதது வெண்பாவாகும். (நூ. 46)
  • வெண்டளைகள் அன்றி வேறுத்தளைகள் வாரா.
வெண்பாவின் ஈற்றடி
  • வெண்பாவின் ஈற்று அடி முச்சீர் அடியாய் வரும். அம்முச்சீர் அடியின் மூன்றாவது சீர் அசைச்சீராக வரும். (நூ. 47)
குறள் வெண்பா
  • வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று ஒரு தொடையில் இரண்டடியாய் அமைவது குறள்வெண்பாவாகும். (நூ. 48)
சிந்தியல் வெண்பா
  • இரண்டு தொடையினவாகிய மூன்றடிகளால் அமைவது சிந்தியல் வெண்பாவாகும்.  (நூ. 49)
நேரிசை வெண்பா
  • இரண்டாம் அடியின் இறுதிசீர் ஒரூஉத் தொடைப் பெற்று, ஒரு விகற்பத்தாலோ பல பல விகற்பத்தாலோ அமைந்து, இரண்டு துண்டாய் இணைந்த ஆடையைப் போல நேரிசை வெண்பா அமையும்.  (நூ. 50)
இன்னிசை வெண்பா
  • நான்கடியாய் தன்சொல் இன்றி ஒரு விகற்பம் பெற்றோ பல விகற்பம் பெற்றோ வருவது இன்னிசை வெண்பாவாகும்.  (நூ. 51)
பஃறொடை வெண்பா
  • தொடையும் அடியும் இத்துனை என்று இல்லாமல் வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று அமைவது பஃறொடை வெண்பாவாகும்.  (நூ. 52)
வெண்பாவின் இனம்
வெண்பாவிற்கு விருத்தம், துறை, தாழிசை என்ற மூன்று இனங்களும் உண்டு. இது பாவின் பெயரும் இனத்தின் பெயரும் தழுவி அழைக்கப்படும்.  (நூ. 53)
குறள்வெண் செந்துறை


💐 *வாசகர்களுக்கு வணக்கம்* தமிழ்க்கடல் வலைதளத்தை சமூக வலைதளங்களில் தொடர கீழே உள்ள லிங்குகளை Click செய்யவும். 👉🏻 *WhatsApp-ல் Follow செய்ய*
https://whatsapp.com/channel/0029Va4r8LdCHDymT0UsdE0p 👉🏻 *YouTube-ல் Subscribe செய்ய*
https://www.youtube.com/@THAMIZHKADALTECH
👉🏻 *Telegram - ல் Follow செய்ய*
https://t.me/thamizhkadaloffical
👉 *அரட்டை - ல் Follow செய்ய* 👉🏻 *Facebook-ல் Follow செய்ய*







 5.  உ. ஆசிரியப்பாவும் அதன் வகையும் 2. கலிப்பாவும் அதன் வகையும் ச. வஞ்சிப்பாவும் அதன் வகையும் ரு. மருட்பா 3. பொதுவியல் க. தனிச்சொல் உ. புறநடை ங. பொருள்கோள் ச. விகாரம் ரு. குறிப்பிசை

Tuesday, February 10, 2026

பாடல் - 46 : மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா!

February 10, 2026

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 

ரெட்டணையில் குடியிருக்கும் அங்காளியே! 
பார்வதியின் மறுஉருவாய் வந்தவளே 
ரெட்டணையில் குடியிருக்கும் அங்காளியே! 
பார்வதியின் மறுஉருவாய் வந்தவளே 
மீனவரின் குலவிளக்கே வாருமம்மா 
வேண்டுகின்ற குறைகளெல்லாம் தீருமம்மா
மீனவரின் குலவிளக்கே வாருமம்மா
வேண்டுகின்ற குறைகளெல்லாம் தீருமம்மா
டிவரும் ஓம்கார வடிவத்திலே 
காட்சிதந்து அமர்ந்திருப்பாய் கோவிலிலே 
டிவரும் ஓம்கார வடிவத்திலே 
காட்சிதந்து அமர்ந்திருப்பாய் கோவிலிலே 
கண்ணான கண்மணியே வந்திடம்மா 
மனம்நிறைய வேண்டுதலை தந்திடம்மா

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் 
வரும் துன்பம் போக்கிடுவாய் ஈஸ்வரியே 
இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் 
வரும் துன்பம் போக்கிடுவாய் ஈஸ்வரியே 
மழைமேகம் பயிர் தாகம் தீர்ப்பதுபோல்
குடும்பத்தில் இன்பங்கள் தந்திடுவாய்
மழைமேகம் பயிர் தாகம் தீர்ப்பதுபோல்
குடும்பத்தில் இன்பங்கள் தந்திடுவாய்
எப்போதும் நினைக்கின்றேன் மனத்துன்னை
தப்பாமல் நிழலாக துணை இருப்பாய்
எப்போதும் நினைக்கின்றேன் மனத்துன்னை
தப்பாமல் நிழலாக துணை இருப்பாய்
பார்வதியே ஈஸ்வரியே அங்காளம்மா
பாவங்கள் தினம் போக்கி காத்திடம்மா

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 

male Voice
Jumping song

vocal layers, - குரல் அடுக்குகள்,
Active punch songs
சுறுசுறுப்பான பக்தி பாடல்

drum breaks - டிரம் உடைக்கிறது
Devotional song பக்தி பாடல்

Saturday, February 7, 2026

பாடல் - 45 : பயப்பட வேண்டும்

February 07, 2026


பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயம் கொண்டு வாழ்வதினால் 
ஒழுக்கம் வந்து சேரும் 
அன்பு இரக்கம் கூடும்
பாவ செயல் விலகும் 
பயம் கொண்டு வாழ்வதினால் 
ஒழுக்கம் வந்து சேரும் 
அன்பு இரக்கம் கூடும்
பாவ செயல் விலகும் 
மதிப்பு வளர்ந்து பெருகும்
உதவி வந்து சேரும் 
கொடிய வார்த்தை மறையும் 
பணிவு கொண்டு வாழ்வோம்.

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயமில்லா மனிதரிடம் 
மதிக்கும் குணம் இருக்காது 
மதியாத மனிதரிடம் 
ஒழுக்க குணம் இருக்காது
பயமில்லா மனிதரிடம் 
மதிக்கும் குணம் இருக்காது 
மதியாத மனிதரிடம் 
ஒழுக்க குணம் இருக்காது
ஒழுக்கமில்லா மனிதரிடம் 
பொது நலமும் இருக்காது
சுயநலன்கள் மிகுந்துவிட்டால் 
வாழ்வில் இன்பம் இருக்காது

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்











புத்தி மாறி போகும்போது 
திருத்த ஆளு வேணுமுங்க 
சொல்லுகின்ற வழி நடந்தா 
வாழ்க்கை மாறி ஜொலிக்குமுங்க
நெறிபடுத்தும் வாழ்க்கையில 
இன்பம் மிகுந்து இருக்குங்க
இன்பம் தரும் வாழ்க்கைதானே 
நமக்கு இப்ப வேணும்ங்க


அன்னை தந்தை சொல்லை மீறி 
எந்த செயலும் செய்தல் தவறு 
அன்னை தந்தை சொல்லும் சொல்லில் 
பாசம் பரிவு நன்மை உண்டு 
அனுப வத்தை மனதில் வைத்து
நம்மைக் காக்க சொல்லு கின்றார் 
அன்னை தந்தை சொல்ல ஏற்போம் 
வாழ்வில் மதித்து வென்று வாழ்வோம்

அண்ணன் தம்பி அக்காள் தங்கை 
என்ற உறவின் தன்மை அறிந்து 
எண்ணம் எதுவென் றிருந்த போதும்
விட்டுக் கொடுத்து உறவைக் காப்பீர்.
மண்ணும் வானும் நிலவும் மாறும் 
உதிரம் பிறந்த உறவு மாறா 
பணத்தை மதித்து உறவை விட்டால் 
பணமும் போகும் உறவும் போகும்


பயம் இல்லா மனிதரிடம் 
நல்ல குணம் இருக்காது 
குணம் இல்லா மனிதரிடம்
அன்பு இரக்கம் இருக்காது
அன்புமட்டும் இல்லை என்றால் 
மிருகமாக மாறிடுவாய் 
மிருக மனித வாழ்க்கையிலே
துன்பம் வந்து சேர்ந்திடுமே

பாடல் - 10 : அரும்பாகி மொட்டாகி மலர்ந்திருக்கும் மழலைகள்

February 07, 2026
பாடல் - 10 : அரும்பாகி மொட்டாகி மலர்ந்திருக்கும் மழலைகள்
அரும்பாகி மொட்டாகி மலர்ந்திருக்கும் மழலைகள்
எதிர்கால உலகினை ஆளவரும் தலைவர்கள்
நேருமாமா என்பவர் நெருங்கிவந்து அவர்களை
அன்புபாசப் பரிவுடன் பற்றுகொண்டு பழகினார்.
முன்னாளின் பிரதமர் முடிசூடா மன்னவர்
மன்னுலகம் போற்றிடும் மகத்தான தலைவராம்,
அன்னவரின் பிறந்தநாள் குழந்தைகளின் தினமென
நாட்டிலுள்ளோர் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம்.

வறுமைகள் எனச்சொல்லி பெற்றெடுத்த மகவினை
வற்புறுத்தி வேலைக்கு அனுப்புகிறார் பெற்றவர்.
குறைவான ஊதியம் நிறைவான பணியென
குழந்தைகளை அமர்த்தியே துன்பங்கள் செய்கிறார்.
ஏழ்மையில் வாடிடும் எண்ணற்ற குழந்தைகள்
பிச்சையினை ஏற்றுத்தன் வாழ்க்கையை நடத்துது.
பாழ்படும் உடல்சுகம் கண்டவர் சிசுக்கொலை
செய்கிறார்பெற் றெடுத்தவர் குப்பையில் வீசினார்.
பால்மணம் மாறிய பருவத்துக் குழந்தையை
பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி மகிழ்கிறார்.

பள்ளிக்குச் சென்றிடாத எண்ணற்ற குழந்தைகள்
தவறான பாதையில் செல்வதையும் காணலாம்.
எண்ணிய கல்வியைக் கற்றுத்தன் வாழ்விலே
ஏற்றங்கள் பெற்று உயர்ந்திட நினைக்கையில்
மண்ணிலே காலூன்றி துளிர்க்கின்ற செடியினை
முனைகிள்ளி வளர்ச்சியைக் குறைப்பதாய் அமையுது.
சத்தில்லாக் குழந்தைகள் இந்தியாவில் மட்டுமே
மிகுதியாக இருப்பதாய் ஆய்வுநிலை பகருது.
இத்தனைக் கொடுமைகள் குழந்தைக்கு இருக்கையில்
தினங்களைக் கொண்டாடி மகிழ்வது சரிதானோ?

Wednesday, February 4, 2026

பாடல் - 44 : ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே!

February 04, 2026

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே! 
ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே! 
ஐந்து கரத்தனே! யானை முகத்தனே!
தடைகள் நீக்கிடும் சக்தி மைந்தனே!
அரச மரத்தடி வேப்ப மரத்தடி
எலியின் மீது அமர்ந்தவனே

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே 

பாரதம் எழுதித் தந்தவனே!
பார்வதி மைந்தன் ஆனவனே!
மாம்பழம் பெற்றுச் சென்றவனே!
முருகன் ஐயன் சோதரனே!
பாரதம் எழுதித் தந்தவனே!
பார்வதி மைந்தன் ஆனவனே!
மாம்பழம் பெற்றுச் சென்றவனே!
முருகன் ஐயன் சோதரனே!
மஞ்சள் சாணம் களிமண்ணில்
பிடித்து வைத்தால் அருள்தருவாய்!
மண்ணில் எங்கும் நீ இருந்து
வெற்றிக் கனியை பரிசளிப்பாய்

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே 

ஆவணி மாதம் வளர்பிறையில்
மண்ணில் வந்த திருமகனே! 
கணங்களின் அதிபதி யாய்இருந்து
காத்து நிற்கும் ஒருமகனே!
ஆவணி மாதம் வளர்பிறையில்
மண்ணில் வந்த திருமகனே! 
கணங்களின் அதிபதி யாய்இருந்து
காத்து நிற்கும் ஒருமகனே!
உன்னை வணங்கிச் செல்பவரின் 
செயலை வெல்லச் செய்திடுவாய்
உன்னை மறந்த தந்தைக்கு 
அச்சு முறிய வைத்திடுவாய்!

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே! 
ஐந்து கரத்தனே! யானை முகத்தனே!
தடைகள் நீக்கிடும் சக்தி மைந்தனே!
அரச மரத்தடி வேப்ப மரத்தடி
எலியின் மீது அமர்ந்தவனே

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே 


Sunday, February 1, 2026

Description

February 01, 2026
Description
#melody
#songs
#tamil
#rettanainarayanakavi 
#tamil 
#trending
#rettanai 
#tamilsong 
#melodyplay 
#melodysongs 
#tamilmelody 
#melodymusic 
#lovesongs 
#romanticsongs 
#hearttouchingsongs 
#soulfulmusic
#emotionalsongs 
#peacefulmusic 
#relaxingmusic 
#calmvibes 
#feelgoodsongs 
#healingmus 
#tamilsongs 
#tamillovesongs 
#kollywoodmelody
#southindiansongs 
#tamilhits 
#musiclovers 
#songlovers 
#dailysongs 
#musicchannel 
#trendingsongs 
#oldsadsong 
#oldsadsongs 
#sadoldsong 
#sadoldmusic 
#oldschoolmusic 
#classicmelancholy 
#vintagesad 
#nostalgicsongs 
#heartbreakclassics 
#sadclassics 
#timelesssad 
#retrofeels 
#oldsoulmusic
#Scene
#குத்துபாடல்கள்mp3
#குத்துபாடல்videos
#எழுந்துநின்னுஆட்டம் போடவைக்கும்மரணகுத்துபாடல்கள்newsongs 
#2017hdlatestvideosongshd
#செமகுத்துடான்ஸ்
#மரணகுத்துஆட்டம்போடவைக்கும்பாடல்கள்
#latest
#kuthu 
#songs #தமிழ்குத்துபாடல்கள்டவுன்லோடு
#குத்துபாட்டு
#குத்துபாடல்கள்download
#செமகுத்துடான்ஸ்எழுந்துநின்னுஆட்டம்போடவைக்கும்மரணகுத்துபாடல்கள் #tamilsongscollections
#மெலோடிபாடல்கள்
#பலபாடல்கள்
#என்றும்இனிமையானபாடல்
#பாடல்கள்2018
#கணபாடல்கள்2018

Saturday, January 31, 2026

இசைப் பாடல்களின் தொகுப்பு

January 31, 2026
இசைப் பாடல்களின் தொகுப்பு
#More_Videos

1. ஓடி வரும் மாரியே 
https://youtu.be/c0kdO7dYrc8

2. இரட்டணையில்  குடி இருக்கும் 

3. உன்னோடு கைகள் கோர்த்து 

4. அன்னை தந்தை என்பவர்கள் 

5. மெல்ல மெல்ல கதை பேசி 

6. பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் 

7. மஞ்சள் சேலைக்காரியே

8. இரவு வரும் பகலும் வரும் 

9. கதை சொல்லப் போறேன் 
https://youtu.be/hjqQsQqWpEA

10. அரும்பாகி மொட்டாகி 
https://youtu.be/VTRriK26lCg

11. தமிழ் வளர்க்கலாம் வாங்க 

12. விவசாயம் பண்ண போறோம் வாங்க
https://youtu.be/W6JfHPupd_E

13. அன்னை மடியில் தலை வைப்போம் 

14. நின்று கொண்டு நின்று கொண்டு 

15. பாஞ்சாலியே எங்கள் பாஞ்சாலியே 

16. பள்ளி செல்ல வேண்டும் தம்பி 

17. காலையில் எழுந்து கண்விழித்தேன் 

18. சொட்டுச் சொட்டுச் சொட்டாக 

19. வா முருகா! வா முருகா! 

20. அழகு அழகு அழகு 

21. பாரதியே! பாரதியே!

22. துருபதன் மகளே! துருபதன் மகளே!

23. தேவதையே! தேவதையே!

24. சின்னதாமரை மலரை போன்றவள் 

25. வெண்ணியம்மா! வெண்ணியம்மா!

26. வைகாசி மாசத்துல 

27. இரண்டு கரையின் நடுவுல 

28. ஒத்தையில அரச மரம் 

29. ஏழு கன்னிகள் ஒன்று சேர்ந்திட 

30. இரட்டை மாட்டு வண்டியில 

31. அழகான பெண்ணுருத்தி 

32. வேப்பிலையில் குடியிருக்கும் 
 
33. மாரி சரஸ்வதி லட்சுமி தாயே!

34. பொங்கல் வருது பொங்கல் வருது

35. அங்காளியே! எங்கள் அங்காளியே! 

36. ஆசை மனைவி கையிலே 

37. வீச்சருவா கையில் வைத்து 

38. அத்தை மகனே! அத்தை மகனே! 

39. புதுமழையே! புதுமழையே

40. காசு பணம் மேல  

41. பணம் தேடி ஓடுகின்ற மனிதர்களே
https://youtu.be/m5XkkVYqU3U

42. துள்ளித்துள்ளி வந்திடும்

43. முதல் முதலாய் மடிதவழ்ந்து 

44. பாரதம் எழுதித் தந்தவனே!

45. பயப்பட வேண்டும்

46. மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 

பாடல் - 43 : முதல் முதலாய் மடிதவழ்ந்து

January 31, 2026


[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 
[Verse - Chorus -  Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 
[Verse - male Voice]
பூச்சொறியும் நந்தவனம் 
ஆனதடா நம் இல்லம் 
தேன் உண்ணும் வண்டாக 
பொங்குதடா என் உள்ளம்
[Verse - Chorus -  Voice]
பூச்சொறியும் நந்தவனம் 
ஆனதடா நம் இல்லம் 
தேன் உண்ணும் வண்டாக 
பொங்குதடா என் உள்ளம்
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 

[Verse - male Voice]
அப்பனின் நிழலாக 
எப்போதும் இருப்பவனே 
உள்ளத்து உணர்வுகளை 
தப்பாமல் சொல்பவனே 
[Verse - Chorus -  Voice]
அப்பனின் நிழலாக 
எப்போதும் இருப்பவனே 
உள்ளத்து உணர்வுகளை 
தப்பாமல் சொல்பவனே 
தித்திக்கும் தேன்கரும்பு 
நீ சிரிக்கும் புன்சிரிப்பு
[Verse - Chorus -  Voice]
தித்திக்கும் தேன்கரும்பு 
நீ சிரிக்கும் புன்சிரிப்பு
நீ அழுதால் உருகிடுவேன் 
உன் முன்னே சிறு துரும்பு
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 

[Verse - male Voice]
மடிமீது தாலாட்டி 
உனைதூங்க வைத்திடுவேன் 
என் சுவையை உனதாக்கி 
நீ சுவைக்க தந்திடுவேன்
[Verse - Chorus -  Voice]
மடிமீது தாலாட்டி 
உனைதூங்க வைத்திடுவேன் 
என் சுவையை உனதாக்கி 
நீ சுவைக்க தந்திடுவேன்
அப்பன் மகன் நாமல்ல 
தோழர்களாய் இருக்கின்றோம் 
[Verse - Chorus -  Voice]
அப்பன் மகன் நாமல்ல 
தோழர்களாய் இருக்கின்றோம் 
உன் மடியில் நான் தூங்க 
ஒரு பொழுது வேணுமடா
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 
பூச்சொறியும் நந்தவனம் 
ஆனதடா நம் இல்லம் 
தேன் உண்ணும் வண்டாக 
பொங்குதடா என் உள்ளம்
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே