Thursday, February 26, 2026

ஆசைப்பட்டு மனைவி

February 26, 2026
ஆசைப்பட்டு மனைவி
ஆசைப்பட்டு மனைவி 
அன்போடு கேட்டால் 
உயிரைத் தந்து கூட 
பெற்றுத் தருதல் வேண்டும்

நேசம் கொண்ட குழந்தை 
தவறு செய்த போதும் 
பிள்ளை மனம் நோகா 
நடந்து கொள்ள வேண்டும் 

அன்னை தந்தை செயல்கள் 
துன்பம் தந்த போதும் 
வயது எண்ணி அவர்மேல் 
அன்பு காட்ட வேண்டும். 

உலகம் உனது எண்ணம் 
போல நடப்பதில்லை 
ஆற்று நீரில் பயணம் 
செய்து கரையைச் சேரு

காக்க வேண்டும் சாமி

February 26, 2026
காக்க வேண்டும் சாமி
காக்க வேண்டும் சாமி என்னைக் 
காக்க வேண்டும் சாமி 
சொந்த பந்தம் யாரும் இல்ல 
காக்க வேண்டும் சாமி 
பார்க்க வேண்டும் சாமி என்னைப் 
பார்க்க வேண்டும் சாமி 
கருணை பார்வை கொண்டு என்னைப் 
பார்க்க வேண்டும் சாமி 

சொந்த பந்தம் எல்லாம் 
உறவை பார்ப்பதில்லை 
பணத்தை நம்பி தானே 
உறவும் தேடி வருது 
பணம் இல்லா மனிதன் 
பழம் இல்லா மரம்தான் 
காய்ந்த குளத்தை நம்பி 
எந்த உயிரும் இல்லை. 

காசு இல்லாத வாழ்க்கை 
காட்டு வழிப் பயணம் 
என்ன நடக்கும் என்று 
யாரும் சொன்னதில்லை 
அன்பு பாசம் எல்லாம் 
காய்ந்த ஆறு தானே 
நீரைக் கொண்டு நிரப்ப 
யாரும் வருதல் இல்லை

Saturday, February 21, 2026

தேரேறி வீதிவரும் அங்காளம்மா!

February 21, 2026
தேரேறி வீதிவரும் அங்காளம்மா!
தேரேறி வீதிவரும் அங்காளம்மா! 
தேடிவரும் பக்தர்களின் குறைதீரம்மா! 
கணவரின் சாபத்தை நீக்கிடவே
புத்தாக மலையனூரில் இருந்தவளே 


சாபத்தை போக்கிடவே மலையனூரில்
புத்தாக தவமிருந்த பார்வதியே
கணவனின் துன்பத்தை மீட்டவளே


சாபத்தை போக்கிட வந்தவளே!
சாமுண்டியான பார்வதியே!
எங்கள் குறை தீர்ந்திடவே உன்னைதேடி




கணவரின் சாபம் தீர்க்க வந்த தேவியே
வணங்கிடும் பக்தர்களின் துன்பம் போக்கியே
உலவிடம் காற்று போல எங்கும் இருப்பவள்

Friday, February 20, 2026

காக்கைபாடினியம் நூல் அறிமுகம்

February 20, 2026
காக்கைபாடினியம் நூல் அறிமுகம்
முனைவர் க. அரிகிருஷ்ணன்
பொருளாளர்
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்


காக்கைபாடினியம்
காக்கைபாடினியர்

காக்கைபாடினியர் யார்?


காக்கைபாடினியம் 
மறைந்து போல நூல்களுள் ஒன்றான காக்கைபாடினியம் யாப்பருங்கல விருத்தி உரையால் உருவான ஒரு நூல். 
இது யாப்பிலக்கணம் மட்டும் கூறும் நூல்

கிடைக்கப்பெற்ற காக்கைபாடினிய நூற்பாக்கள் 76 அதன் அடிகள் 216


1. உறுப்பியல் 
  1. எழுத்து - 13
  2. அசை - 2
  3. சீர் 
  4. தளை 
  5. அடி 
  6. தொடை 
1. எழுத்து (13)
  1. குறில்
  2. நெடில்
  3. அளபெடை
  4. உயிர்
  5. மெய்
  6. உயிர்மெய்
  7. வல்லினம்
  8. மெல்லினம்
  9. இடையினம்
  10. ஆய்தம்
  11. குற்றியலிகரம்
  12. குற்றியலுகரம்
  13. ஐகாகரக்குறுக்கம் (நூ. 1)
எழுத்துகளின் சிறப்பு விதிகள்
  • ஆய்தம், ஒற்று இரண்டு எழுத்துகளும் அளபெடுக்கும் போது மட்டும் அலகு பெறும் (நூ. 2)
  • குற்றியலிகரம், குற்றியலுகரம் இரண்டும் சீரும் தளையும் சிதைகின்ற காலத்து அளகு பெறாது. ஒற்றெழுத்து போலவே கருதப்படும். (நூ. 3)
  • உயிரளபெடை சீரும் தளையும் சிதைகின்ற காலத்து நெடில் எழுத்தாக மட்டுமே அலகு  பெறும். (நூ. 4)
2. அசை  
  1. தனியசை - நேரசை
  2. இணையசை - நிரையசை(நூ. 5)
  • ஒற்றெழுத்துக்கள் நீங்களாக தனித்து வரும் அசை - தனியசை
  • இரண்டு எழுத்துகள் இணைந்து வரும் அசை - இணையசை
இணையசை ஆகாதவை  
  • நேடிலோடு நெடிலும் நெடிலோடு குறிலும் சேர்ந்து வரும் (ஆரா காடு) என்பன இணையசை ஆகாது. (நூ. 6)
ஐகாரத்திற்குச் சிறப்பு விதி  

முதலில் வரும் ஐ நெடிலாகவும் அதாவது தனியசையாகவும் இடை, கடை ஆகிய இடங்களில் வரும் ஐகாரம் குறிலாகவும் (இணையசையாகவும் கொள்ளுதல் வேண்டும். (நூ.7)

3. சீர்

ஆசிரிய உரிச்சீர்

ஈரசைகளால் வரும் நான்கு சீரும் இயற்சீர் எனப்படும்.(நூ. 8)
  1. நேர் நேர்
  2. நிரை நேர்
  3. நிரை நிரை
  4. நேர் நிரை
இயற்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் ஆசிரிய உரிச்சீராகும்.(நூ. 9)

வெண்பா, வஞ்சி உரிச்சீர்கள்

மூவசைகளாக வரும் எட்டு சீர்களுள் தனி (நேர்) அசைகளாக வரும் நான்கும் வெண்பா உரிச்சீராகவும் இணை (நிரை) அசைகளாக வரும் நான்கும் வஞ்சி உரிச்சீராகவும் கொள்ளப்படும். (நூ. 10)

வெண்பா உரிச்சீர்கள்

நேர் நேர் நேர் - தேமாங்காய்
நிரை நேர் நேர் - புளிமாங்காய்
நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நேர் நிரை நேர் - கூவிளங்காய்

வஞ்சி உரிச்சீர்கள்

நேர் நேர் நிரை - தேமாங்கனி
நிரை நேர் நிரை - புளிமாங்கனி
நிரை நிரை நிரை - கருவிளங்கனி
நேர் நிரை நிரை - கூவிளங்கனி

இயற்சீர், உரிச்சீர் வரும் இடங்கள்

இயற்சீர், உரிச்சீர் என்பன நால்வகைப் பாக்களிலும் மூன்று இனங்களிலும் மயங்கி வரும். (நூ. 11)

இயற்சீர், உரிச்சீர் வரும் இடங்களுக்கான சிறப்பு விதி

ஆசிரியப்பா, வெண்பா ஆகிய இரண்டிலும் ஆசிரிய உரிச்சீரான இயற்சீரும் வெண்பா உரிச்சீர்களான காய்ச்சீரும் விரவி வரும்.

கலிப்பா, வஞ்சிப்பாக்களில் தனி அசையில் முடியும் (மாச்சீர்) வாரா.(நூ. 12)

மேலும் இணைசீர் நடுவாக உடைய ( நிரை நடுவாகிய ) விளங்கனிச் சீர்கள் ஆசிரியப்பாவில் வருதல் இல்லை.(நூ. 13)

நாலசைச்சீரும் ஒரசைச்சீரும்

தண்பூ, தண்நிழல், நறும்பூ, நறுநிழல் எனவரும் நாலசைச்சீர் (16), நேர், நிரை எனவரும் ஓரசைச்சீர்கள்(2) ஆகிய பதிணெட்டும் சிற்சில இலங்களில் வரும்.(நூ. 14)

நாலசைச்சீர்கள் செய்யுளில் வருமாறு

நாலசைச்சீர்கள் வஞ்சிப்பாவில் ஓரடியில் இரண்டு இணைந்தும் ஏனைய பாக்களில் ஒன்றாகவும் வரும். ஆயினும். நிரையென முடியும் நாலசைச்சீர்கள் வஞ்சிப்பாவிற்கே உரியதாகும். (நூ. 15)

தளை

இயற்சீர்கள் இரண்டும் கூடி தம்முள் விகற்பம் (மாறுபடாமல்) இல்லாமல் விரவி வருவன ஆசிரியத்தளை ஆகும்.(நூ. 16)

இயற்சீர் இரண்டும் தம்முள் ஒன்றாமல் வருவது இயற்சீர் வெண்டளை. (நூ. 17)

வெண்பா உரிச்சீரோடு ஒன்றி வருவது வெண்டளை. (நூ. 18)
வெண்பா உரிச்சீரோடு இணைசீர்(நிரை) ஒன்றுவது கலித்தளை. (நூ. 19)
இணையசை இறுதியாக உடைய மூவசைச்சீர்கள் தம்முள் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது வஞ்சித்தளை. (நூ. 20)

5. அடி

குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என அடி ஐந்து வகையாகும். (நூ. 21)

அடி அளவு

குறளடி - இருசீரடி
சிந்தடி - முச்சீரடி
அளவடி - நாற்சீரடி
நெடிலடி - ஐஞ்சீரடி
கழிநெடிலடி - அறுசீரடி(நூ. 22)

கழிநெடிலடிக்கு மேலும் ஒர் அளவு

எண்சீரடி, எழுசீரடியும் கழிநெடிலடியாகக் கொள்ளப்படும். (நூ. 23)

எண்சீரின் மிக்குவரும் கழிநெடிலடிகள்

இரண்டு சீர்கள் முதலாக எட்டு சீர்கள் ஈறாக உள்ள அடிகள் சிறப்புடையன. இந்த எட்டு சீரினும் மிகுந்து வரும் சீர்களால் உடைய அடிகள் சிறப்புடையன அல்ல. (நூ. 24)

வஞ்சிப்பாவிற்கு வரும் அடிகள்

சிந்தடி, குறளடி ஆகிய இரண்டும் வஞ்சிப்பாவிற்கு உரியன.  (நூ. 25)

அகவல், வெள்ளை, கலிப்பாக்களுக்கு வரும் அடிகள்

மூவகைப் பாக்களும் நாற்சீர் அடிகளைக் கொண்டு அமையும்.  (நூ. 26)
இந்த மூவகைப் பாக்களில் சிந்தடி, குறளடி வருதலும் உண்டு.  (நூ. 27)

பாவினங்களுக்கு வரும் அடிவகை

விருத்தம், துறை, தாழிசை எனப்படும் பாவினங்கள் மூன்றும் குறளடி முதலாக அனைத்து அடிகளாலும் அமையும்.   (நூ. 28)

பாக்களின் அடிச்சிறுமை

வெண்பா - இரண்டடி
ஆசிரியப்பா - மூன்றடி
வஞ்சிப்பா - மூன்றடி  (நூ. 29)
கலிப்பா - நான்கடி  (நூ. 30)

பாக்களின் அடிப் பெருமை

புலவலின் குறிப்பளவே பாக்களின் பெருமை அளவு (நூ. 31)

6. தொடை
  • எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றும் ஒருங்கு அமைந்து, அடியோடு அடி தொடுக்கப் பெறுதல் தொடை. (அடியோடு அடி கட்டுவது தொடை.) (நூ. 32)
அடிமோனை அடி எதுகைத் தொடைகள்
  • முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
  • இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
  • ஓர் எழுத்தின் வருக்கமும் இனமும் வந்து ஒன்றினும் மொனை எதுகை எனக் கொள்ளப்படும்.அதாவது இனமொனை வருக்கமோனை, இன எதுகை வருக்க எதுகை என்பன (நூ. 33)
எதுகைக்கு மேலும் ஒரு சிறப்பு விதி
  • ய்,ர்,ல்,ழ் ஆகிய நான்கு ஒற்றுகளும் எதுகையாக நிற்பது மட்டுமல்லாமல் மோனைக்கும் எதுகைக்கும் இடையில் வரின் அதனை ஆசிடை எதுகையாகக் கொள்ளப்படும். 
  • எடுத்துக்காட்டாக, காய்மாண்ட, பூமாண்ட ஆகிய இரண்டு சொற்களில் எதுகையாக மா வந்துள்ளது எனினும் முதல் சொல்லில் காய்மாண்ட என ய் ஒன்று வந்துள்ளது. இதனை எதுகையாகக் கொள்ளாமல் ஆசிடை எதுகையாகக் கொள்ள வேண்டும். (நூ. 34)
முரண்தொடை
  • அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்பட்டு வருவது முரண்தொடை எனப்படும். (நூ. 35)
இயைபுத்தொடை
  • அடிதோறும் இறுதி ஒன்றி வருவது இயைபுத் தொடையாகும். (நூ. 36)
அளபெடைத்தொடை
  • அடிதோறும் மாத்திரை அளபெடுத்து வருவது அளபெடைத்தொடை எனப்படும். (நூ. 37)
இணைத்தொடை
  • முதல் சீரும் இரண்டாம் சீரும் மோனை முதலாகத் தொடுப்பது இணைத்தொடை எனப்படும். (நூ. 38)
பொழிப்பு ஒரூஉ தொடைகள்
  • முதல்சீரும் மூன்றாம் சீரும் மோனை முதலாகத் தொடுப்பது பொழிப்புத்தொடை எனப்படும். (நூ. 39)
  • முதல்சீரும் நான்காம் சீரும் மோனை முதலாகத் தொடுப்பது ஒரூஉத்தொடை எனப்படும். (நூ. 39)
மேற்கதுவாய் கீழ்க்கதுவாய்த் தொடைகள்
  • ஒன்று, மூன்று, நான்கு ஆகிய சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது மேற்கதுவாய்த்தொடை எனப்படும். (நூ. 40)
  • ஒன்று, இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது கீழ்க்கதுவாய்த்தொடை எனப்படும். (நூ. 40)
கூழை, முற்று தொடைகள்
  • முதல் மூன்று  சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது கூழைத்தொடை எனப்படும். (நூ. 41)
  • அடியின் அனைத்து  சீர்களில் மோனை முதலாகத் தொடுப்பது கூழைத்தொடை எனப்படும். (நூ. 41)
இரட்டைத் தொடை
  • அடி முழுவதும் ஒரே சீர் (சொல்) அடிமுழுதும் வருவது இரட்டைத் தொடை எனப்படும். (நூ. 42)
அந்தாதித் தொடை
  • அசையால் ஆயினும் சீரால் ஆயினும் அடிதோறும் இறுதிக்கண் நின்றது அடுத்த அடியின் முதலாக அமைவது அந்தாதித் தோடை எனப்படும்.(நூ. 43)
செந்தொடை
  • மோனை, எதுகை, இயைபு, முரண் போன்ற செயற்கையான தொடை நயங்கள் (அணிகள்) ஏதுமின்றி, சொற்களின் இயல்பான ஓசை நயத்தினால் அழகுற அமையும் செய்யுள் வகையாகும்.(நூ. 44)
  • செம்மை அடையாத தொடையை செந்தொடை  என்றனர்.
தொடைகளுக்கான சிறப்பு விதி
  • ஒரு செய்யுளில் பலவகைத் தொடைகளும் அடிகளும் வந்தால் அதன் முதலில் வந்த தொடையாலோ அடியாலோ அதற்குப் பெயரிட்டு கூறப்படும். (நூ. 45)
2. செய்யுளியல்

வெண்பாவும் அதன் வகையும்
  • சிறந்து உயர்ந்த செப்பலோசை அன்றி வேறு ஓசையால் வராதது வெண்பாவாகும். (நூ. 46)
  • வெண்டளைகள் அன்றி வேறுத்தளைகள் வாரா.
வெண்பாவின் ஈற்றடி
  • வெண்பாவின் ஈற்று அடி முச்சீர் அடியாய் வரும். அம்முச்சீர் அடியின் மூன்றாவது சீர் அசைச்சீராக வரும். (நூ. 47)
குறள் வெண்பா
  • வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று ஒரு தொடையில் இரண்டடியாய் அமைவது குறள்வெண்பாவாகும். (நூ. 48)
சிந்தியல் வெண்பா
  • இரண்டு தொடையினவாகிய மூன்றடிகளால் அமைவது சிந்தியல் வெண்பாவாகும்.  (நூ. 49)
நேரிசை வெண்பா
  • இரண்டாம் அடியின் இறுதிசீர் ஒரூஉத் தொடைப் பெற்று, ஒரு விகற்பத்தாலோ பல பல விகற்பத்தாலோ அமைந்து, இரண்டு துண்டாய் இணைந்த ஆடையைப் போல நேரிசை வெண்பா அமையும்.  (நூ. 50)
இன்னிசை வெண்பா
  • நான்கடியாய் தன்சொல் இன்றி ஒரு விகற்பம் பெற்றோ பல விகற்பம் பெற்றோ வருவது இன்னிசை வெண்பாவாகும்.  (நூ. 51)
பஃறொடை வெண்பா
  • தொடையும் அடியும் இத்துனை என்று இல்லாமல் வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று அமைவது பஃறொடை வெண்பாவாகும்.  (நூ. 52)
வெண்பாவின் இனம்
வெண்பாவிற்கு விருத்தம், துறை, தாழிசை என்ற மூன்று இனங்களும் உண்டு. இது பாவின் பெயரும் இனத்தின் பெயரும் தழுவி அழைக்கப்படும்.  (நூ. 53)
குறள்வெண் செந்துறை


💐 *வாசகர்களுக்கு வணக்கம்* தமிழ்க்கடல் வலைதளத்தை சமூக வலைதளங்களில் தொடர கீழே உள்ள லிங்குகளை Click செய்யவும். 👉🏻 *WhatsApp-ல் Follow செய்ய*
https://whatsapp.com/channel/0029Va4r8LdCHDymT0UsdE0p 👉🏻 *YouTube-ல் Subscribe செய்ய*
https://www.youtube.com/@THAMIZHKADALTECH
👉🏻 *Telegram - ல் Follow செய்ய*
https://t.me/thamizhkadaloffical
👉 *அரட்டை - ல் Follow செய்ய* 👉🏻 *Facebook-ல் Follow செய்ய*







 5.  உ. ஆசிரியப்பாவும் அதன் வகையும் 2. கலிப்பாவும் அதன் வகையும் ச. வஞ்சிப்பாவும் அதன் வகையும் ரு. மருட்பா 3. பொதுவியல் க. தனிச்சொல் உ. புறநடை ங. பொருள்கோள் ச. விகாரம் ரு. குறிப்பிசை

Tuesday, February 10, 2026

பாடல் - 46 : மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா!

February 10, 2026

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 

ரெட்டணையில் குடியிருக்கும் அங்காளியே! 
பார்வதியின் மறுஉருவாய் வந்தவளே 
ரெட்டணையில் குடியிருக்கும் அங்காளியே! 
பார்வதியின் மறுஉருவாய் வந்தவளே 
மீனவரின் குலவிளக்கே வாருமம்மா 
வேண்டுகின்ற குறைகளெல்லாம் தீருமம்மா
மீனவரின் குலவிளக்கே வாருமம்மா
வேண்டுகின்ற குறைகளெல்லாம் தீருமம்மா
டிவரும் ஓம்கார வடிவத்திலே 
காட்சிதந்து அமர்ந்திருப்பாய் கோவிலிலே 
டிவரும் ஓம்கார வடிவத்திலே 
காட்சிதந்து அமர்ந்திருப்பாய் கோவிலிலே 
கண்ணான கண்மணியே வந்திடம்மா 
மனம்நிறைய வேண்டுதலை தந்திடம்மா

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் 
வரும் துன்பம் போக்கிடுவாய் ஈஸ்வரியே 
இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் 
வரும் துன்பம் போக்கிடுவாய் ஈஸ்வரியே 
மழைமேகம் பயிர் தாகம் தீர்ப்பதுபோல்
குடும்பத்தில் இன்பங்கள் தந்திடுவாய்
மழைமேகம் பயிர் தாகம் தீர்ப்பதுபோல்
குடும்பத்தில் இன்பங்கள் தந்திடுவாய்
எப்போதும் நினைக்கின்றேன் மனத்துன்னை
தப்பாமல் நிழலாக துணை இருப்பாய்
எப்போதும் நினைக்கின்றேன் மனத்துன்னை
தப்பாமல் நிழலாக துணை இருப்பாய்
பார்வதியே ஈஸ்வரியே அங்காளம்மா
பாவங்கள் தினம் போக்கி காத்திடம்மா

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்
சிலம்பொலியில் உன்பெருமை பாடுகிறேன் 
நீ இல்லாத இடத்தினையே தேடுகிறேன்

மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 
பூங்கரகம் எடுத்துவந்தோம் ஊர்கோலமாய் 

male Voice
Jumping song

vocal layers, - குரல் அடுக்குகள்,
Active punch songs
சுறுசுறுப்பான பக்தி பாடல்

drum breaks - டிரம் உடைக்கிறது
Devotional song பக்தி பாடல்

Saturday, February 7, 2026

பாடல் - 45 : பயப்பட வேண்டும்

February 07, 2026


பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயம் கொண்டு வாழ்வதினால் 
ஒழுக்கம் வந்து சேரும் 
அன்பு இரக்கம் கூடும்
பாவ செயல் விலகும் 
பயம் கொண்டு வாழ்வதினால் 
ஒழுக்கம் வந்து சேரும் 
அன்பு இரக்கம் கூடும்
பாவ செயல் விலகும் 
மதிப்பு வளர்ந்து பெருகும்
உதவி வந்து சேரும் 
கொடிய வார்த்தை மறையும் 
பணிவு கொண்டு வாழ்வோம்.

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயமில்லா மனிதரிடம் 
மதிக்கும் குணம் இருக்காது 
மதியாத மனிதரிடம் 
ஒழுக்க குணம் இருக்காது
பயமில்லா மனிதரிடம் 
மதிக்கும் குணம் இருக்காது 
மதியாத மனிதரிடம் 
ஒழுக்க குணம் இருக்காது
ஒழுக்கமில்லா மனிதரிடம் 
பொது நலமும் இருக்காது
சுயநலன்கள் மிகுந்துவிட்டால் 
வாழ்வில் இன்பம் இருக்காது

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்

பயப்பட வேணும் நாம 
பயப்பட வேணும் 
பெரியவங்களைப்  பார்த்து
பயப்பட வேணும்
மதித்திட வேணும் நாம 
மதித்திட வேணும் 
மூத்தவர்களின் சொல்லை 
மதித்திட வேணும்











புத்தி மாறி போகும்போது 
திருத்த ஆளு வேணுமுங்க 
சொல்லுகின்ற வழி நடந்தா 
வாழ்க்கை மாறி ஜொலிக்குமுங்க
நெறிபடுத்தும் வாழ்க்கையில 
இன்பம் மிகுந்து இருக்குங்க
இன்பம் தரும் வாழ்க்கைதானே 
நமக்கு இப்ப வேணும்ங்க


அன்னை தந்தை சொல்லை மீறி 
எந்த செயலும் செய்தல் தவறு 
அன்னை தந்தை சொல்லும் சொல்லில் 
பாசம் பரிவு நன்மை உண்டு 
அனுப வத்தை மனதில் வைத்து
நம்மைக் காக்க சொல்லு கின்றார் 
அன்னை தந்தை சொல்ல ஏற்போம் 
வாழ்வில் மதித்து வென்று வாழ்வோம்

அண்ணன் தம்பி அக்காள் தங்கை 
என்ற உறவின் தன்மை அறிந்து 
எண்ணம் எதுவென் றிருந்த போதும்
விட்டுக் கொடுத்து உறவைக் காப்பீர்.
மண்ணும் வானும் நிலவும் மாறும் 
உதிரம் பிறந்த உறவு மாறா 
பணத்தை மதித்து உறவை விட்டால் 
பணமும் போகும் உறவும் போகும்


பயம் இல்லா மனிதரிடம் 
நல்ல குணம் இருக்காது 
குணம் இல்லா மனிதரிடம்
அன்பு இரக்கம் இருக்காது
அன்புமட்டும் இல்லை என்றால் 
மிருகமாக மாறிடுவாய் 
மிருக மனித வாழ்க்கையிலே
துன்பம் வந்து சேர்ந்திடுமே

பாடல் - 10 : அரும்பாகி மொட்டாகி மலர்ந்திருக்கும் மழலைகள்

February 07, 2026
பாடல் - 10 : அரும்பாகி மொட்டாகி மலர்ந்திருக்கும் மழலைகள்
அரும்பாகி மொட்டாகி மலர்ந்திருக்கும் மழலைகள்
எதிர்கால உலகினை ஆளவரும் தலைவர்கள்
நேருமாமா என்பவர் நெருங்கிவந்து அவர்களை
அன்புபாசப் பரிவுடன் பற்றுகொண்டு பழகினார்.
முன்னாளின் பிரதமர் முடிசூடா மன்னவர்
மன்னுலகம் போற்றிடும் மகத்தான தலைவராம்,
அன்னவரின் பிறந்தநாள் குழந்தைகளின் தினமென
நாட்டிலுள்ளோர் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம்.

வறுமைகள் எனச்சொல்லி பெற்றெடுத்த மகவினை
வற்புறுத்தி வேலைக்கு அனுப்புகிறார் பெற்றவர்.
குறைவான ஊதியம் நிறைவான பணியென
குழந்தைகளை அமர்த்தியே துன்பங்கள் செய்கிறார்.
ஏழ்மையில் வாடிடும் எண்ணற்ற குழந்தைகள்
பிச்சையினை ஏற்றுத்தன் வாழ்க்கையை நடத்துது.
பாழ்படும் உடல்சுகம் கண்டவர் சிசுக்கொலை
செய்கிறார்பெற் றெடுத்தவர் குப்பையில் வீசினார்.
பால்மணம் மாறிய பருவத்துக் குழந்தையை
பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி மகிழ்கிறார்.

பள்ளிக்குச் சென்றிடாத எண்ணற்ற குழந்தைகள்
தவறான பாதையில் செல்வதையும் காணலாம்.
எண்ணிய கல்வியைக் கற்றுத்தன் வாழ்விலே
ஏற்றங்கள் பெற்று உயர்ந்திட நினைக்கையில்
மண்ணிலே காலூன்றி துளிர்க்கின்ற செடியினை
முனைகிள்ளி வளர்ச்சியைக் குறைப்பதாய் அமையுது.
சத்தில்லாக் குழந்தைகள் இந்தியாவில் மட்டுமே
மிகுதியாக இருப்பதாய் ஆய்வுநிலை பகருது.
இத்தனைக் கொடுமைகள் குழந்தைக்கு இருக்கையில்
தினங்களைக் கொண்டாடி மகிழ்வது சரிதானோ?

Wednesday, February 4, 2026

பாடல் - 44 : ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே!

February 04, 2026

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே! 
ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே! 
ஐந்து கரத்தனே! யானை முகத்தனே!
தடைகள் நீக்கிடும் சக்தி மைந்தனே!
அரச மரத்தடி வேப்ப மரத்தடி
எலியின் மீது அமர்ந்தவனே

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே 

பாரதம் எழுதித் தந்தவனே!
பார்வதி மைந்தன் ஆனவனே!
மாம்பழம் பெற்றுச் சென்றவனே!
முருகன் ஐயன் சோதரனே!
பாரதம் எழுதித் தந்தவனே!
பார்வதி மைந்தன் ஆனவனே!
மாம்பழம் பெற்றுச் சென்றவனே!
முருகன் ஐயன் சோதரனே!
மஞ்சள் சாணம் களிமண்ணில்
பிடித்து வைத்தால் அருள்தருவாய்!
மண்ணில் எங்கும் நீ இருந்து
வெற்றிக் கனியை பரிசளிப்பாய்

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே 

ஆவணி மாதம் வளர்பிறையில்
மண்ணில் வந்த திருமகனே! 
கணங்களின் அதிபதி யாய்இருந்து
காத்து நிற்கும் ஒருமகனே!
ஆவணி மாதம் வளர்பிறையில்
மண்ணில் வந்த திருமகனே! 
கணங்களின் அதிபதி யாய்இருந்து
காத்து நிற்கும் ஒருமகனே!
உன்னை வணங்கிச் செல்பவரின் 
செயலை வெல்லச் செய்திடுவாய்
உன்னை மறந்த தந்தைக்கு 
அச்சு முறிய வைத்திடுவாய்!

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே! 
ஐந்து கரத்தனே! யானை முகத்தனே!
தடைகள் நீக்கிடும் சக்தி மைந்தனே!
அரச மரத்தடி வேப்ப மரத்தடி
எலியின் மீது அமர்ந்தவனே

ஒற்றைக் கொம்பனே! பானை வயிறனே! 
சுண்டல் பிரியனே! மூத்த மைந்தனே!
ஆத்து ஓரமாய்! குளத்து ஓரமாய்!
சாலை ஓரமாய் அமர்ந்தவனே 


Sunday, February 1, 2026

Description

February 01, 2026
Description
#melody
#songs
#tamil
#rettanainarayanakavi 
#tamil 
#trending
#rettanai 
#tamilsong 
#melodyplay 
#melodysongs 
#tamilmelody 
#melodymusic 
#lovesongs 
#romanticsongs 
#hearttouchingsongs 
#soulfulmusic
#emotionalsongs 
#peacefulmusic 
#relaxingmusic 
#calmvibes 
#feelgoodsongs 
#healingmus 
#tamilsongs 
#tamillovesongs 
#kollywoodmelody
#southindiansongs 
#tamilhits 
#musiclovers 
#songlovers 
#dailysongs 
#musicchannel 
#trendingsongs 
#oldsadsong 
#oldsadsongs 
#sadoldsong 
#sadoldmusic 
#oldschoolmusic 
#classicmelancholy 
#vintagesad 
#nostalgicsongs 
#heartbreakclassics 
#sadclassics 
#timelesssad 
#retrofeels 
#oldsoulmusic
#Scene
#குத்துபாடல்கள்mp3
#குத்துபாடல்videos
#எழுந்துநின்னுஆட்டம் போடவைக்கும்மரணகுத்துபாடல்கள்newsongs 
#2017hdlatestvideosongshd
#செமகுத்துடான்ஸ்
#மரணகுத்துஆட்டம்போடவைக்கும்பாடல்கள்
#latest
#kuthu 
#songs #தமிழ்குத்துபாடல்கள்டவுன்லோடு
#குத்துபாட்டு
#குத்துபாடல்கள்download
#செமகுத்துடான்ஸ்எழுந்துநின்னுஆட்டம்போடவைக்கும்மரணகுத்துபாடல்கள் #tamilsongscollections
#மெலோடிபாடல்கள்
#பலபாடல்கள்
#என்றும்இனிமையானபாடல்
#பாடல்கள்2018
#கணபாடல்கள்2018

Saturday, January 31, 2026

இசைப் பாடல்களின் தொகுப்பு

January 31, 2026
இசைப் பாடல்களின் தொகுப்பு
#More_Videos

1. ஓடி வரும் மாரியே 
https://youtu.be/c0kdO7dYrc8

2. இரட்டணையில்  குடி இருக்கும் 

3. உன்னோடு கைகள் கோர்த்து 

4. அன்னை தந்தை என்பவர்கள் 

5. மெல்ல மெல்ல கதை பேசி 

6. பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் 

7. மஞ்சள் சேலைக்காரியே

8. இரவு வரும் பகலும் வரும் 

9. கதை சொல்லப் போறேன் 
https://youtu.be/hjqQsQqWpEA

10. அரும்பாகி மொட்டாகி 
https://youtu.be/VTRriK26lCg

11. தமிழ் வளர்க்கலாம் வாங்க 

12. விவசாயம் பண்ண போறோம் வாங்க
https://youtu.be/W6JfHPupd_E

13. அன்னை மடியில் தலை வைப்போம் 

14. நின்று கொண்டு நின்று கொண்டு 

15. பாஞ்சாலியே எங்கள் பாஞ்சாலியே 

16. பள்ளி செல்ல வேண்டும் தம்பி 

17. காலையில் எழுந்து கண்விழித்தேன் 

18. சொட்டுச் சொட்டுச் சொட்டாக 

19. வா முருகா! வா முருகா! 

20. அழகு அழகு அழகு 

21. பாரதியே! பாரதியே!

22. துருபதன் மகளே! துருபதன் மகளே!

23. தேவதையே! தேவதையே!

24. சின்னதாமரை மலரை போன்றவள் 

25. வெண்ணியம்மா! வெண்ணியம்மா!

26. வைகாசி மாசத்துல 

27. இரண்டு கரையின் நடுவுல 

28. ஒத்தையில அரச மரம் 

29. ஏழு கன்னிகள் ஒன்று சேர்ந்திட 

30. இரட்டை மாட்டு வண்டியில 

31. அழகான பெண்ணுருத்தி 

32. வேப்பிலையில் குடியிருக்கும் 
 
33. மாரி சரஸ்வதி லட்சுமி தாயே!

34. பொங்கல் வருது பொங்கல் வருது

35. அங்காளியே! எங்கள் அங்காளியே! 

36. ஆசை மனைவி கையிலே 

37. வீச்சருவா கையில் வைத்து 

38. அத்தை மகனே! அத்தை மகனே! 

39. புதுமழையே! புதுமழையே

40. காசு பணம் மேல  

41. பணம் தேடி ஓடுகின்ற மனிதர்களே
https://youtu.be/m5XkkVYqU3U

42. துள்ளித்துள்ளி வந்திடும்

43. முதல் முதலாய் மடிதவழ்ந்து 

44. பாரதம் எழுதித் தந்தவனே!

45. பயப்பட வேண்டும்

46. மாசியிலே ஆடிவரும் அங்காளம்மா! 

பாடல் - 43 : முதல் முதலாய் மடிதவழ்ந்து

January 31, 2026


[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 
[Verse - Chorus -  Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 
[Verse - male Voice]
பூச்சொறியும் நந்தவனம் 
ஆனதடா நம் இல்லம் 
தேன் உண்ணும் வண்டாக 
பொங்குதடா என் உள்ளம்
[Verse - Chorus -  Voice]
பூச்சொறியும் நந்தவனம் 
ஆனதடா நம் இல்லம் 
தேன் உண்ணும் வண்டாக 
பொங்குதடா என் உள்ளம்
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 

[Verse - male Voice]
அப்பனின் நிழலாக 
எப்போதும் இருப்பவனே 
உள்ளத்து உணர்வுகளை 
தப்பாமல் சொல்பவனே 
[Verse - Chorus -  Voice]
அப்பனின் நிழலாக 
எப்போதும் இருப்பவனே 
உள்ளத்து உணர்வுகளை 
தப்பாமல் சொல்பவனே 
தித்திக்கும் தேன்கரும்பு 
நீ சிரிக்கும் புன்சிரிப்பு
[Verse - Chorus -  Voice]
தித்திக்கும் தேன்கரும்பு 
நீ சிரிக்கும் புன்சிரிப்பு
நீ அழுதால் உருகிடுவேன் 
உன் முன்னே சிறு துரும்பு
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 

[Verse - male Voice]
மடிமீது தாலாட்டி 
உனைதூங்க வைத்திடுவேன் 
என் சுவையை உனதாக்கி 
நீ சுவைக்க தந்திடுவேன்
[Verse - Chorus -  Voice]
மடிமீது தாலாட்டி 
உனைதூங்க வைத்திடுவேன் 
என் சுவையை உனதாக்கி 
நீ சுவைக்க தந்திடுவேன்
அப்பன் மகன் நாமல்ல 
தோழர்களாய் இருக்கின்றோம் 
[Verse - Chorus -  Voice]
அப்பன் மகன் நாமல்ல 
தோழர்களாய் இருக்கின்றோம் 
உன் மடியில் நான் தூங்க 
ஒரு பொழுது வேணுமடா
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 
பூச்சொறியும் நந்தவனம் 
ஆனதடா நம் இல்லம் 
தேன் உண்ணும் வண்டாக 
பொங்குதடா என் உள்ளம்
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே

Friday, January 30, 2026

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே

January 30, 2026
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே 
உலகத் தத்துவம் சொல்லுங்க 
வாழும்போது தடைகளெல்லாம் 
வந்து வந்து நிக்கிதுங்க 
கடவுள் மீது நம்பிக்கை 
வைக்க சமயம் சொல்லுங்க 
நம்பிக்கை வைத்து காத்திருந்தால்
கையை கட்டி நிக்குதுங்க

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே 
உலகத் தத்துவம் சொல்லுங்க 
வாழும்போது தடைகள் எல்லாம் 
வந்து வந்து நிக்கிதுங்க

வாழ்க்கை வாழ்வதற்கு 
நம்பிக்கை ஒரு பலமே! 
நம்பிக்கை இல்லை என்றால் 
வாழ்தல் ஒருசுமையே! 
நம்பிக்கை ஜெயிப்பதற்கு 
கடவுளும் ஒருதுணையே! 
கடவுளர் கைவிட்டால் 
முயற்சிகள் தோற்றிடுமே!

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே 
உலகத் தத்துவம் சொல்லுங்க 
வாழும்போது தடைகள் எல்லாம் 
வந்து வந்து நிக்கிதுங்க

பற்றிடும் கொடிகளுக்கு 
பற்றுக் கொம்பே கடவுள் 
கடவுள் விலகி நின்றால் 
கொடியின் நிலைதான் என்ன? 
நம்பிக்கை யோடு முயன்று 
கடினப்பட்டு உழைத்தும் 
தோல்விகள் வந்தது என்றால் 
நம்பிக்கை பயன்தான் என்ன?

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே 
உலகத் தத்துவம் சொல்லுங்க 
வாழும்போது தடைகள் எல்லாம் 
வந்து வந்து நிக்கிதுங்க 
கடவுள் மீது நம்பிக்கை 
வைக்க சமயம் சொல்லுங்க 
நம்பிக்கை வைத்து காத்திருந்தால்
கையை கட்டி நிக்குதுங்க

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே 
உலகத் தத்துவம் சொல்லுங்க 
வாழும்போது தடைகள் எல்லாம் 
வந்து வந்து நிக்கிதுங்க


ஜெயித்திட வேண்டும் ஜெய்த்திட வேண்டும் வாழ்வில் என்றும் ஜெயித்திட வேண்டும் வெற்றி கொடியை நாட்ட முயன்று உழைத்திட வேண்டும்

ஏத்தம் போட்டு நீர் எறச்சி

January 30, 2026
ஏத்தம் போட்டு நீர் எறச்சி
பாட்டாளி மக்கள் நாங்க 
பாடுபடும் கூட்டமுங்க. 
ஏடெடுத்து படிச்சதில்ல 
ஏமாத்த நினைச்சதில்ல

காட்டுலையும் மேட்டுலையும் 
உழைச்சு உழைச்சு ஓடாபோனோம் 
வானம் நம்பி பயிர நம்பி
வறுமையிலே தானே நின்னோ

ஏத்தம் போட்டு நீர் எறச்சி
நெல்லு பசி போக்கிடும்
ஊத்து மணல் நாத்தெடுத்து
பயிரு பச்சை செஞ்சிடுவோம்
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
உரமாக தந்திடுவோம்
கண்ணபோல காத்திருந்து
களத்துமேடு சேர்த்திடுவோம்


மாடுகட்டி ஏறு ஒட்டி 
சேறுவயல் நாத்து நட்டு 
களைபறிச்சி பார்த்து நிற்போம் 
நெல்விளைய காத்து நிற்போம்

பாடல் - 37 : வீச்சருவா கையில் வைத்து

January 30, 2026


வீச்சருவா கையில் வைத்து
வீரத்தை நெஞ்சில் வைத்து 
ஊரை எல்லாம் காவல் காக்கும் 
அய்யனாரே! அய்யனாரே!
வீச்சருவா கையில் வைத்து 
வீரத்தை நெஞ்சில் வைத்து 
ஊரை எல்லாம் காவல் காக்கும் 
அய்யனாரே! அய்யனாரே!
காண வந்த கூட்டம் எல்லாம் 
உன்னை கண்டு சொக்குதய்யா 
கண்டு கண்டு மெய்மறந்து 
பொம்மைபோல நிக்குதய்யா 

வீச்சருவா கையில் வைத்து 
வீரத்தை நெஞ்சில் வைத்து 
ஊரை எல்லாம் காவல் காக்கும் 
அய்யனாரே!  அய்யனாரே! 

ஏத்தி வச்ச நெய்விளக்கு 
உன் உருவம் காட்டுதய்யா 
பொங்கல் வைத்து பூச வைத்து 
உன் பெருமை பேசுதய்யா 
ஏத்தி வச்ச நெய்விளக்கு 
உன் உருவம் காட்டுதய்யா 
பொங்கல் வைத்து பூச வைத்து 
உன்பெருமை பேசுதய்யா 
திக்கெட்டு உள்ளசனம் 
இங்க வந்து கூடுதய்யா
கோவில் சுத்தும் கூட்டம் எல்லாம் 
காக்க சொல்லி வேண்டுதய்யா

வீச்சருவா கையில் வைத்து 
வீரத்தை நெஞ்சில் வைத்து 
ஊரை எல்லாம் காவல் காக்கும் 
அய்யனாரே!  அய்யனாரே! 

ஊரையெல்லாம் கூட்டிக்கிட்டு 
பொங்க பானை தூக்கிக்கிட்டு 
கோவிலிலே பொங்க வைத்து 
உங்களுக்குத் தந்திடுவோம் 
ஊரையெல்லாம் கூட்டிக்கிட்டு 
பொங்க பானை தூக்கிக்கிட்டு 
கோவிலிலே பொங்க வைத்து 
உங்களுக்குத் தந்திடுவோம்
எல்லையிலே நின்றவரே 
எங்கள் குலம் காப்பவரே 
எட்டு திசை பேரைச்சொல்ல 
ஓரிடத்தில் நின்றவரே!

வீச்சருவா கையில் வைத்து 
வீரத்தை நெஞ்சில் வைத்து 
ஊரை எல்லாம் காவல் காக்கும் 
அய்யனாரே!  அய்யனாரே!
காண வந்த கூட்டம் எல்லாம் 
உன்னை கண்டு சொக்குதய்யா 
கண்டு கண்டு மெய் மறந்து 
பொம்மைபோல நிக்குதய்யா 

வீச்சருவா கையில் வைத்து 
வீரத்தை நெஞ்சில் வைத்து 
ஊரை எல்லாம் காவல் காக்கும் 
அய்யனாரே!  அய்யனாரே!

Monday, January 26, 2026

பாடல் - 36 : ஆசை மனைவி கையிலே

January 26, 2026


ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 
ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 
மண்ணில் வந்த போதிலே
உனக்காய் பிறந்து வளர்ந்தவள்
நேரம் காலம் கூடிட
நிழலாய் வந்து சேர்ந்தவள்

ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 

வீசும் காற்றின் தூசினை 
தட்டி சுவாசம் தருவள்
பாசம் கொண்டு உறவினை
கட்டி மாலை செய்பவள்
வீசும் காற்றின் தூசினை 
தட்டி சுவாசம் தருவள்
பாசம் கொண்டு உறவினை
கட்டி மாலை செய்பவள்
நேசம் கொண்டு வாழ்வினை
உச்சம் காண வைப்பவள்
வாசம் வீசும் பூவென
புகழைப் பரப்பி வாழ்பவள்

ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 

உன்னை நம்பி வந்தவள்
உள்ளம் உருகி நின்றவள்
உன்னை நெஞ்சில் தாங்கியே
பிள்ளைச் செல்வம் தந்தவள்
உன்னை நம்பி வந்தவள்
உள்ளம் உருகி நின்றவள்
உன்னை நெஞ்சில் தாங்கியே
பிள்ளைச் செல்வம் தந்தவள்
உனது ஆசை எதுவென
அறிந்து அதையே செய்பவள்
உள்ளம் நோகும் பொழுதிலே
உயிரைத் தந்துக் காப்பவள்

ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 
மண்ணில் வந்த போதிலே
உனக்காய் பிறந்து வளர்ந்தவள்
நேரம் காலம் கூடிட
நிழலாய் வந்து சேர்ந்தவள்

ஆசை மனைவி கையிலே 
சோறு உண்டு பாரடா 
சொர்க்கம் என்பது மண்ணிலே 
வேறு எங்கும் இல்லையே 

Sunday, January 25, 2026

சங்கு சக்கரம் கையில்

January 25, 2026
சங்கு சக்கரம் கையில்
சங்கு சக்கரம் 
கையில் ஏந்தியே 
நின்று காத்திடும் 
அன்பு தாயடி 
உந்தன் அழகினை 
கண்டு மயங்கியே 
உள்ளம் உருகிடும் 
உந்தன் சேயடி

தேடிவரும் பக்தருக்கு 
திருமுகத்தைக் காட்டிடுவாய்
தீராத அவருடைய 
துன்பங்களை வாட்டிடுவாய் 
தேடிவரும் பக்தருக்கு 
திருமுகத்தைக் காட்டிடுவாய்
தீராத அவருடைய 
துன்பங்களை வாட்டிடுவாய் 
அள்ளி அள்ளி தந்திடுவாய் 
உந்தன் அருட்செல்வம் 
பக்தர்களின் உள்மனதில் 
உன்நினைவும் பொங்கும்

சங்கு சக்கரம் 
கையில் ஏந்தியே 
நின்று காத்திடும் 
அன்பு தாயடி 

வடக்கால பாத்திருந்து 
ஆட்சிசெய்யும் அம்மா
ஏடெடுத்து பாடுகிறேன் 
மற்றதெல்லாம் சும்மா
வடக்கால பாத்திருந்து 
ஆட்சிசெய்யும் அம்மா
ஏடெடுத்து பாடுகிறேன் 
மற்றதெல்லாம் சும்மா
உன்புகழைச் சொல்லி 
பாடுகிறேன் துள்ளி
எந்தமனம் ஆடும் 
உன்நினைவைத் தேடும்

சங்கு சக்கரம் 
கையில் ஏந்தியே 
நின்று காத்திடும் 
அன்பு தாயடி 
உந்தன் அழகினை 
கண்டு மயங்கியே 
உள்ளம் உருகிடும் 
உந்தன் சேயடி

சங்கு சக்கரம் 
கையில் ஏந்தியே 
நின்று காத்திடும் 
அன்பு தாயடி 



சங்கு சக்கரம் கையில் 
வைத்து இருப்பாயே நீயே 
பொங்கும் புன்னகை தந்து 
உள்ளம் கவர்ந்திடுவாயே
எல்லாம் உன் செயலாலே 
எங்கும் நிகழ்ந்திட கண்டேன் 
பொள்ளாப் பிள்ளையும் உந்தன் 
பாதம் பணிந்திட கண்டேன்

சங்கு சக்கரம் கையில் 
வைத்து இருப்பாயே நீயே 
  
அழகாக கொலுவிருந்து 
அருள்வழங்கும் தாயே 
அன்னையினை தேடிவந்த 
நானும் உந்தன் சேயே 
மலராக பூத்திருந்து 
காட்சிதரும் அன்னை 
மனதிற்குள் கோவில்கட்டி 
வைத்திருப்பேன் உன்னை

சங்கு சக்கரம் கையில் 
வைத்து இருப்பாயே நீயே 



சங்கு சக்கரம் கையில் 
வைத்து இருப்பாயே நீயே 



சங்கு சக்கரம் கையில் 
வைத்து இருப்பாயே நீயே 






சங்கு சக்கரம் கையில் ஏந்திடும் சப்த கன்னியும் நீயடி

அம்மனே வெண்ணி அம்மனே
எட்டுதிசை ஆட்சிசெய்யும் அம்மனே வெண்ணி அம்மனே 
பூவுக்குள் ஒளிந்திருக்கும் அம்மனே வெண்ணி அம்மனே 
வெற்றிமாலை சூட்டிடுவாய் அம்மனேவெண்ணி அம்மனே 

ஊரெல்லாம் உன்பெருமை பேசுதம்மா 
உன்னருளே பூமிஎங்கும் வீசுதம்மா 
கண்ணாலே பார்த்தவங்க எல்லோரும் 
சொன்னதினால் கூட்டமிங்கும் கூடுதம்மா 

சங்கு சக்கரம் கையில் ஏந்தியே வைஷ்ணவையே 
பொங்கும் புன்னகை அருள் மழையாகத் தருபவளே
எங்கும் எதிலும் எப்பொழுதும் நீ இருப்பாயே 
திங்கள் சூரியன் தாரகை எல்லாம் உன்வடிவே

செவ்வாய் வெள்ளி அருள் தர பக்தரை அழைத்து விடுவாய்
பொங்கும் புன்னகை முகத்தைக் கொண்டவள் சிங்கம் ஏறியே ஊரைக் காப்பவள்

https://app.dupdub.com/login?status=signUp&invitation_code=miyOfw3X

Thursday, January 22, 2026

பாடல் - 38 : அத்தை மகனே அத்தை மகனே

January 22, 2026


அத்தை மகனே அத்தை மகனே
எனது உள்ளம் கவர்ந்தவரே
எத்தனை உறவு இருந்த போதிலும் 
என்னை நெஞ்சில் வைத்தவரே

அத்தை மகனே அத்தை மகனே
எனது உள்ளம் கவர்ந்தவரே

பெத்த பிள்ளைபோல எனக்கு வேண்டிய
அத்தனையும் செய்து தந்தவரே
சித்தம் கலங்கிய நேரத்திலே பக்கம் 
ஆறுதலாய் துணை நின்றவரே
வீச்சருவா கொண்டு காவல் காத்திடும் 
அய்யனாரின் பெயர் கொண்டவரே
எதற்கும் துணிந்து நின்றவரே கையில்
வெற்றிக் கனியை தந்தவரே

அத்தை மகனே அத்தை மகனே
எனது உள்ளம் கவர்ந்தவரே

எந்தன் செயலில் உள்ளம் மகிழ்ந்து
ஊக்கம் அள்ளித் தந்தவரே
விண்ணை தொடும் சாதனை செய்ய
உள்ளம் மகிழ்ந்து இருந்தவரே
வேண்டிய பொழுது வேண்டியதை தந்து
கடவுள் போல காப்பவரே
நாளும் வந்திடும் சூரியனைப் போல
தினமும் கண்டு ரசிப்பவரே

அத்தை மகனே அத்தை மகனே
எனது உள்ளம் கவர்ந்தவரே










வீச்சருவாள் கையில் வைத்து
ஊரைக் காக்கும் தெய்வம் போல
என்மேல் உந்தன் பாசம் வைத்து
என்னைக் காத்து வருகின்றாய்
விண்ணைத்தாண்டி சாதனை செய்ய
ஊக்கம் தந்து மகிழ்கின்றாய்
முந்தை ஜென்ம வினை பயனோ
இன்று உன்னை அடைவதற்கு



















அத்தை மகனே அத்தை மகனே
என் உள்ளம் கவர்ந்த அத்தை மகனே

பெத்த பிள்ளைபோல எனக்கு வேண்டிய 
அத்தனையும் செய்து தந்தவரே 
சித்தம் கலங்கிய நேரத்திலே பக்கம்
ஆறுதலாய் துணை நின்றவரே
வீரனின் பெயரை தன் பெயராய் கொண்டு 
பேருக்கு ஏற்றார்கள் வாழ்ந்தவரே 
தனித்த கோடியாய் இருந்த எனக்கு 
கொம்புபோல நின்று காத்தவரே

அத்தை மகனே அத்தை மகனே
என் உள்ளம் கவர்ந்த அத்தை மகனே

வீச்சருவாள் கையில் வைத்து 
ஊரைக் காக்கும் தெய்வம் போல 
என்மேல் உந்தன் பாசம் வைத்து 
என்னைக் காத்து வருகின்றாய் 
விண்ணைத்தாண்டி சாதனை செய்ய 
ஊக்கம் தந்து மகிழ்கின்றாய் 
முந்தை ஜென்ம வினை பயனோ 
இன்று உன்னை அடைவதற்கு

அத்தை மகனே அத்தை மகனே
என் உள்ளம் கவர்ந்த அத்தை மகனே

Wednesday, January 21, 2026

பாடல் - 35 : அங்காளியே எங்கள் அங்காளியே

January 21, 2026
பாடல் - 35 : அங்காளியே எங்கள் அங்காளியே
அங்காளியே எங்கள் அங்காளியே 
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா 
வேற்றுருவாய் வந்த காளியம்மா
அங்காளியே எங்கள் அங்காளியே 
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா 
வேற்றுருவாய் வந்த காளியம்மா
கலைமகள் சாபத்தால் வந்தவளே 
வயதான தோற்றத்தைக் கொண்டவளே 
கொக்கு இறகினை சூடிக்கொண்டு
காட்டிலும் மேட்டிலும் வாழ்பவளே

அங்காளியே எங்கள் அங்காளியே 
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா 
வேற்றுருவாய் வந்த காளியம்மா

அமாவாசையில் ஊஞ்சலாட்டி 
எலுமிச்ச மாலையால் அலங்கரித்து 
பொங்கலும் பூசையும் வைத்திடுவோம் 
பூ மகளே உள்ளம் குளிர்ந்திடம்மா.
அமாவாசையில் ஊஞ்சலாட்டி 
எலுமிச்ச மாலையால் அலங்கரித்து 
பொங்கலும் பூசையும் வைத்திடுவோம் 
பூ மகளே உள்ளம் குளிர்ந்திடம்மா.
எங்களின் வேண்டுதல் முன்னே வைத்து 
இல்லமும் உள்ளமும் தூய்மை செய்து 
குடும்பத்தோடு வழிபடுவோம் 
வேண்டும் வரங்கள் தந்திடம்மா

அங்காளியே எங்கள் அங்காளியே 
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா 
வேற்றுருவாய் வந்த காளியம்மா

மாசியில் விழா கொண்டவளே 
மக்களைத் தேடி வந்தவளே 
மயானத்தில் உக்கிரமாய் 
அசுர வதம் செய்தவளே 
மாசியில் விழா கொண்டவளே 
மக்களைத் தேடி வந்தவளே 
மயானத்தில் உக்கிரமாய் 
அசுர வதம் செய்தவளே 
தீய சக்திகள் அண்டாமல் 
தீவினை வந்து சேராமல் 
எங்கள் குறைகள் போக்கிடமா
குடும்பம் தழைக்கச் செய்திடம்மா

அங்காளியே எங்கள் அங்காளியே 
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா 
வேற்றுருவாய் வந்த காளியம்மா
கலைமகள் சாபத்தால் வந்தவளே 
வயதான தோற்றத்தைக் கொண்டவளே 
கொக்கு இறகினை சூடிக்கொண்டு
காட்டிலும் மேட்டிலும் வாழ்பவளே

அங்காளியே எங்கள் அங்காளியே 
ரெட்டணையில் கோவில் கொண்டவளே
வேப்பிலையில் வாழும் மாரியம்மா 
வேற்றுருவாய் வந்த காளியம்மா

தந்தை உடன் பிறப்பால்

January 21, 2026
தந்தை உடன் பிறப்பால்
தந்தை உடன் பிறப்பால் வந்த உறவு இது 
தனித்த கொடி என்னை வளர்க்கும் கொழுகொம்பு 
விண்ணைத் தொடுவதற்கு ஊக்கி விடும் அம்பு 
நீயே எந்தன் வாழ்வின் புதுத் தெம்பு

வீரன் பெயரை தன் பெயராய் பெற்று ஒருவர் நீயன்றோ! 
பெயரின் குணத்திற்கு ஏற்றபடி காத்து நிற்கும் தாயன்றோ! 
தேவையறிந்து கொடுக்கின்ற என்னுள் வாழும் இறையன்றோ! 
பார்த்து பார்த்து ரசிக்கின்ற நலன் விரும்பி தானன்றோ!

அழகிய உறவாய் அன்பின் வடிவாய் பழகி வந்த துணைநீயே! 
நயந்த மொழியால் வியந்து மகிழும் நெருங்கி வந்த இறைநீயே

Friday, January 16, 2026

பாடல் - 40 : காசு பணம் மேல

January 16, 2026


காசு பணம்மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு 
காசு பணம் மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு 
உரிமைகளைக் கேட்டு
உறவுகளை விட்டு 
தனிமையாக நின்னோம்
தாய் உறவைக் கொன்னோம்

காசு பணம்மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு 

அண்ணன் தம்பி பாசம் 
ஆயுள் வரை வீசும்
அக்கா தங்கை யோட 
அன்பு இன்னும் பேசும் 
அண்ணன் தம்பி பாசம் 
ஆயுள் வரை வீசும்
அக்கா தங்கை யோட 
அன்பு இன்னும் பேசும் 
மூத்தவங்க சொல்லை 
கேட்டு வந்த காலம் 
தனிமனித ஒழுக்கம்
இருந்த அந்த காலம்

காசு பணம்மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு 

தாய் தந்த உறவு 
உடன்பிறப்புதாங்க 
மத்த உறவு எல்லாம் 
வந்து போகும்தாங்க 
தாய் தந்த உறவு 
உடன்பிறப்புதாங்க 
மத்த உறவு எல்லாம் 
வந்து போகும்தாங்க 
மாசில்லாத அன்பு 
உறவில் மட்டும்தாங்க 
நேசம் வச்சிபாரு 
நோயும் ஓடிப்போகும்.

காசு பணம்மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு 
உரிமைகளைக் கேட்டு
உறவுகளை விட்டு 
தனிமையாக நின்னோம்
தாய் உறவைக் கொன்னோம்
காசு பணம்மேல 
ஆச வச்சதால 
பாச மெல்லாம் போச்சு 
பந்தம் விட்டு போச்சு